29 April 2006

கல்லிலே கலை வண்ணம் -6

வரலாறு.காம் என்று பொன்னியின் செல்வன் யாஹ¤ குழுமத்திலிருந்து சிலர் தனியாக ஆரம்பித்து, அது இப்போது சரித்திரம் படிப்பவர்கள், ஆய்வாளர்கள், மற்றும் தமிழ் ரசிகர்கள், தமிழ்நாட்டுக் காதலர்களிடையே மிகவும் பிரபலமாக உள்ளது! நான் எழுதிய புள்ளமங்கைக் கோயில் சிற்பங்களை படித்த நண்பர் சேஷாத்ரி கோகுல், தான் வரலாறு.காமில் எழுதிய புள்ளமங்கை கட்டுரையை மீண்டும் உயிர்பித்து, எனது சில படங்களோடு சேர்த்து வெளியிடுள்ளார்! அவருக்கு நன்றி. நண்பரின் கட்டுரை மிகச் சிறப்பாக உள்ளது. கணினி வல்லுநர் எப்படி சரித்திரத் தேர்ச்சி கொண்டார் என்பதற்கு விடை :- இம்மாதிரியான சிற்பங்களை பார்க்கும் எந்த கலா ரசிகனுக்கும், நமது முன்னோரின் உயரிய கலை ரசனயும், திறமையும் வெளிப்படும்; அது நம்மை சரித்திரக் காதலன்/ காதலி ஆக்கிவிடும். (வரலாறு.காம் மா.லாவண்யா கோபித்துக் கொள்ளக்கூடாது என்பதால் )
ஒரே சிலை இருவரின் உள்ளங்களில் எப்படி வேறு வேறு உணர்ச்சிகளைத் தூண்டியுள்ளது என்பது பற்றியும் வாசகர்கள் படித்துத் தெரிந்து கொள்ளவே, இந்த பதிவு.அந்த சுட்டிகளை மீண்டும் ஒரு முறை தருகிறேன்:-

http://varalaaru.com/Default.asp?articleid=325http://maraboorjc.blogspot.com/2006/01/1.html
http://maraboorjc.blogspot.com/2006/02/2.html
http://maraboorjc.blogspot.com/2006/02/3_06.html
http://maraboorjc.blogspot.com/2006/02/4_08.html
http://maraboorjc.blogspot.com/2006/02/5.html

No comments: