
புள்ளமங்கைக் கோயில் தொடர்ச்சி..
அடுத்து, நான் போன இடுகையில் குறிப்பிட்ட சின்னச் சின்ன அற்புதக் கல்வெட்டுச்சித்திரங்கள் ப்ரகாரத்தினைச் சுற்றிலும் உள்ளன. மிக அதிக பட்சமாக 6" X 4" அளவே கொண்ட மினி கலைப் புதையல் அவை!! ஒன்றொன்றும் ஒரு கதை பேசுகிறது!!
முதலில் நாம் காண்பது சிவதாண்டவத்தில் சில காட்சிகள்:-
முதல் கலைக் கல் ஒரு நிஜ கலக்கல்!! சிவனைப் பாருங்கள்! மேல் நோக்கிய ஒரு மந்தஹாசமான பார்வை! 8 கைகளும் பல முத்திரைகள் தாங்கி, ஒரு கால் தூக்கிய நிலையில், இடுப்பிலுள்ள நாகாபரணப் பாம்புகூட ஆடும் ஒரு action shot!! சுற்றியுள்ள பூதகணம், மெய்மறந்து ஆச்சரியத்தைத் தாங்கிய முகபாவம்! (முகம் சிதைந்து போனாலும், நம்மால் அந்த ஆச்சரிய பாவத்தை அனுபவிக்க முடிகிறது!) அருகிலுள்ள தேவகன்னிகை (அ) பார்வதி, விசுவருபமெடுத்து ஆடும் ஆனந்த தாண்டவனை உவகை மேலிடக் காண்கிறாள்!! இவை அத்தனையும், இச்சிறு கற்சதுரத்தில் பதிக்கப் பட்டிருக்கும் அழகு, சோழர்காலத்து கலைஞர்களின் உயரிய நயத்துக்கு எடுத்துக்காட்டன்றோ?
1 comment:
//முதல் கலைக் கல் ஒரு நிஜ கலக்கல்!! // good flow and start up!
Post a Comment