13 February 2006

போர்ப் பேய் - கவியோகி


நான் போன இடுகையில் கொடுத்த மங்கலப் பண்ணினைப் பாடியவர், மஹரிஷி, கவியோகி சுத்தானந்த பாரதியார். ஒரே ஒரு நண்பர் சரியாக, இதனை இயற்றியவர் சுத்தானந்த பாரதி என நேராக விடை கூறாமல், சுத்தானந்த பாரதியை மறக்க முடியுமோ? என்று கேள்வி கேட்டு என்னை நெத்தியடி அடித்துவிட்டார்! நண்பர் அனாநிமஸ் எனப்பதிலெழுதியதால், பரிசு அறிவித்தபடி சுத்தானந்தரின் புத்தககங்கள் அனுப்ப முடியாததற்கு வருந்துகிறேன். நண்பர் தயவு செய்து விலாசம் எழுதினால், என் மனது ஆறும். சுப்ரமணிய பாரதிக்குப் பின் கவித்துவத்தால் 'மகரிஷி','பாரதி' பட்டங்கள் பெற்றவர்; தாமாக சேர்த்துக்கொண்டவர் இல்லை!
கவியோகியின் மற்றொரு அமைதிப் பாட்டை இன்று தருகிறேன்:-

விஞ்ஞானத்தால் வாழ்வு செழிக்கும்
வியன்கள் புரிய வருள்
அஞ்ஞானத்தால் அணுகுண்டெறியும்
அடுபோர் நீக்கி யருள்
மெஞ்ஞானத்தால் மேதினியன்பின்
விண்ணக மாகவருள்
எஞ்ஞா னத்தும் மெஞ்ஞானமதாய்
இலகும் பரமாத்மா!!

இவ்விரண்டு பாட்டையும், அமெரிக்க தலைவரிடமும், ஏனைய 'பெரிய தலை'களுக்கும் மொழிபெயர்த்துத்தரவும் தேவையில்லை!கவியோகியே, 'Peace Anthem' என்று அன்று ருசியா, பெர்லின் நாடுகளில் பாடிய பாட்டை இன்று அவர்களுக்கு அனுப்பிவைத்தால் போதும்; வேப்பிலை நன்கு வேலை செய்தால், போர்ப் பேய் அடங்கும்!

No comments: