13 January 2012

கோயில் கதைகள் -2

கோவில் கதைகள் என்ற தலைப்பில் வல்லமை.காம் வலைத்தளத்தில் எனது கட்டுரைகள் வெளிவருகின்றன.

இம்மாதக் கட்டுரை, திருவையாறு ஐயாறப்பர் கோயில் புனரமைப்புப் பற்றியது.

மேலே படிக்க இங்கே சொடுக்கவும்.



09 September 2011

வலைதள தொலைக்காட்சியில் நான்

கோவில்கள் புனரமைப்பு பற்றிய பேட்டி இங்கே

குறைந்த செலவில் குடிநீர் பற்றிய பேட்டி இங்கே

அன்புடன்

மரபூர் ஜெய. சந்திரசேகரன்


30 July 2011

வல்லமையில் கோவில் கதைகள்

நிஜ நிகழ்வுகள்:

கோவில் புனரமைப்புகளுக்கு போகும்போது நடக்கும் நிஜக் கதைகள்.

வல்லமை இணையதளத்தில் முதல் கதை இதோ

08 July 2011

குறைந்த செலவில் தூய குடிநீர்

தூய குடிநீர் என்பது வாழ்வின் மிக முக்கியமான அத்தியாவசியமாகிவிட்டது. பிஃல்டர்கள் வாங்கலாம் என்றால், முதலும், பரமரிப்பு வருடாந்திர செலவுகளும், கடைநிலை மக்களுக்கு எட்டாக் கனியாகிவிட்டது. மக்கள் பணியும் மகேசன் பணியே. நண்பர்கள் சிலருக்கு த் தெரிந்திருக்கலாம். பல மன, பணக் கஷ்டங்களுக்கிடையே நான் உலகிலேயே மிகக் குறைந்த செலவிலான குடிநீர் வடிகட்டியினைத் தயாரிக்க முற்பட்டுள்ளேன் என்று. இறைவன் அருளாலும், உடனிருக்கும் பல நல் உள்ளங்களாலும், இன்று ஏதோ கால் ஊன்றியுள்ளேன்.

மேலும் Nano technologyயின் மூலம் 100% கிருமிகள் வடிகட்டுதலும், உப்பை நீக்கும் பணியிலும், இந்த களிமண்ணாலான வடிகட்டியை மேம்படுத்த சிந்தனை மனதில் உள்ளது. Nano technology நிபுணர்கள் கட்டாயம் நம் மின் தளத்தில் உள்ளனர்.இருந்தால், என்னுடன் தனிமடலில் தொடர்பு கொண்டால், மேற்கொண்டு இன்னும் சிறப்பாக இதை வடிவமைக்க முடியும். தொடர்புக்கு: naturalfilter@gmail.com

நல்ல நேரத்தில் புதியதலைமுறை இதழில் இது குறித்த கட்டுரை வந்துள்ளது. மக்கள் பயனடையட்டும்.

29 April 2011

Sand blasting தடை செய்ய வேண்டும் - உயர்த்துங்கள் போர்க்கொடி


புராதன சின்னங்கள், ஆலயங்களில் ஆபத்துமிக்க sand blasting எனும் சுத்தம் செய்யும் முறையை கண்டித்து பல இடங்களில் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

தமிழ்ஹிந்து.காமில் எனது கட்டுரை

அதற்கு உரமூட்ட எழுத்தாளர் ஜயமோஹனின் கட்டுரைகள்-1, 2 மற்றும் 3

பிறந்த நாளை விட, எனது திருமண நாளை விடவும் மிக, மிக மகிழ்ச்சி அளிக்கும் நாள் இன்று. (29.04.2011). ஏனெனில், நான் இதுவரை தேடி கிடைக்காத sand blastingஐ தடை செய்ய இந்து அறநிலையத்துறை ஆணையின் நகல் இன்று ஒரு அன்பர் மூலம் என் கைகளில் கிடைத்தது. இதோ அதன் நகல் இங்கே:

இதன் படி பார்த்தால், 2002க்கு பிறகு sand blasting செய்யப்பட்ட கோயில்களின் பொறுப்பாளர்கள் யாராக இருந்தாலும் பணி நீக்கம் செய்யப்படலாம், அல்லவா?

இனி எங்கேனும் sand blasting நடந்தால், இதன் நகலை அந்த கோயில் நிர்வாகிகளிடன் தரவும். Sand blasting செய்யும் கைகளுக்கு இரும்புக் காப்பிடவும்

உடன் எடுத்துச் செல்ல வசதியாக உள்ள படியெடுக்க உதவியாக ஹை ரெஸொலுஷன் நகல் இங்கே

05 November 2010

சரஸ்வதி ஸ்நானம் ஆச்சா!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். மின் தமிழ் அன்பர்கள் மிக்க தமிழ் மரபு அரக்கட்டளைக்காக, ஒரு மாமனிதனை நான் பேட்டி எடுக்கப்போயிருந்தேன்.
அதன் முழு வடிவம் இங்கே கேளுங்கள்


இரண்டே இரண்டு டேபிள் வெயிட் (table weight) அவற்றின் மேல் உள்ள புடைப்பு சிற்பமும், எழுத்துக்களும் ஒருவரது வாழ்க்கைப் பாதையை மாற்ற முடியுமா? முடியும் என்றே சொல்கிறது இந்த ஒரு நவீன பகீரதனின் வாழ்க்கை. ஆம், அன்று பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான்.

இந்த நவீன பகீரதனோ, பூமிக்குக் கீழே மறைந்து ஓடும் ஜீவ நதியாம் சரஸ்வதியை பூமிக்கு மேலே கொண்டுவந்துள்ளார்!

6 மாதங்களில் முடிக்க வேண்டிய ஒரு பணி 20 ஆண்டு காலம் நீடித்தால்?

நீடித்தால், நம்மை பணி நீக்கம் செய்து விடுவார்கள் :)

ஆனால்,அதே தன் வாழ்வின் குறிக்கோளாக, ஆரிய திராவிட பிரித்துப் பார்க்கும் மாயை, மொழி வேற்றுமை, உலக வாழ்வியலுக்கு முன்னோடியாக பாரதத்தில் பல இடங்களில் பூமிக்கு 300 அடி கீழே ஓடிக்கொண்டிருக்கும் நம் ஜீவ நதி சரஸ்வதி, ராம சேது, நதிகள் இணைப்புத் திட்டம் - இப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் பல விசாரணைகளை தம்மிடையே ஆய்வுக்கு உட்படுத்தி, நம் நாட்டின் தொன்மையையும், புனிதத்தியும் நிலை நாட்ட தன் வங்கிப் பணியையே துறந்து ஆய்ந்து, முடிவுகளை தனது புத்தகங்கள் மூலமும், தனது ஆராய்ச்சி நிறுவனம் மூலமாகவும் பரப்பி வரும் ஒரு நிறை குடம் முனைவர். கல்யாணராமன். இனி, இவரது கோப்புகளைக் கேட்டபின் நாம் சொல்லப்போகும் தீபாவளி விசாரிப்பு என்ன தெரியுமா?

பாருங்கள் இந்தப்படங்களை . முனைவர் கல்யாணராமனின் படைப்புகள் மற்றும் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்த அந்த இரண்டு மேஜை கனங்கள் (Table weight with Indus script and animals)

அவரது நீண்ட பேட்டியை சிறிது சிறிதாக பல பாகங்களாக தர உள்ளேன்.

இனி வரப்போகும் தீபாவளிகளில் நீங்கள் கேட்கப்போகும் குசல விசாரணை:

சரஸ்வதி ஸ்நானம் ஆச்சா?

சரிதானே!





15 August 2010

கொடி காத்த கிழவி!

மாதங்கினி ஹஸ்ரா (1869 - 1942) எனும் முதிய பெண்மணிக்கு, காந்தி அடிகளின் பாதையே மூச்சு! அவர் பேச்சே வேத வாக்கு! அவரது அதீத காந்தி மபக்தியால், அவரை எல்லாரும் காந்தி பூரி (BURI) என்றே அழைத்தனர். பூரி என்றால் கிழவி என்று பொருள். அந்த செல்லப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. வெள்ளையனே வெளியெறு இயக்கம் உச்சமடைந்த நேரம். 1942. காந்தி பூரிக்கு 73 வயது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டதுமே, ஆத்திரப்பட்டவர்களில் காந்தி பூரியும் ஒருவர். பலர் ஊர்வலங்கள், எதிர்ப்பு கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர். டாம்லுக் காவல் நிலையத்தின் வாயிலில் (இன்றைய மிட்நாபூர் மாவட்டம்), கொடி ஏந்தி காந்தியடிகளை விடுதலை செய்யக்கோரி அறைகூவல் விடுத்தவர்களின் தலைவியாக நின்றார் காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ரா! (செப்டம்பர் 29,1942).காவல் நிலையத்தில் ஏற்றியிருந்த யூனியன் ஜாக் எனும் ஆங்கிலக் கொடியை தூக்கி எறிந்துவிட்டு, நமது மூவர்ணக் கொடியை அங்கே நிறுவக் கோரி கோஷங்கள் எழுந்து உச்ச ஸ்தாயியை அடைந்தது!
காவலர்கள் உரக்க எச்சரித்தனர்! “போய் விடுங்கள்”. இல்லையேல் நாய்களைப் போல் சுடப்படுவீர்கள்! யுனியன் ஜாக் கொடியை யாராலும் அசைக்க முடியாது.”மற்றொரு அதிகாரி, “ஏய் கிழவி! இந்த வயதில் உனக்கு எதற்கு வம்பு? போ! ஓடிவிடு!” என்று கூறியபடியே சுடுவதற்கான ஆணை பிறப்பித்து சைகையைச் செய்தார்! எல்லாரும் துப்பாக்கியைக் கண்டதும் ஓட ஆரம்பித்தனர். அசையாமல் நின்ற ஒரே உருவம் - காந்தி பூரி! ஓடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவனது கைகளிலிருந்து மூவர்ணக் கொடியை பரித்து, காவல் நிலையத்தை நோக்கி முன்னேறினார். முதலில் அதைக் கண்டு பரிகாசம் செய்த காவலர்கள், முன்னேறும் அந்த வீரக்கிழவியைப் பார்த்து, “போ! போய்விடு! கிழவிகளை எல்லாம் எங்கள் துப்பாக்கி சுடாது,” என்று கூறி விரட்ட முற்பட்டனர்.
முன்னேறிய காந்தி பூரி சடசடவென காவல் நிலைய மாடிப்படிகளில் ஏறத் தொடங்கினார். அவரது குறி: மேலே பறக்கும அந்த வெள்ளையனின் கொடியை பறித்துவிட்டு, மூவர்ணக் கொடியை நடுவதுதான்! மேலும் எச்சரிக்கைகள் தொடர்வதை காதில் போடாமல், கொடிக் கம்பத்தை நெருங்கிவிட்ட காந்தி பூரியைப் பார்த்த அதிகாரி கத்தினான்,” ஏய்! நில், நில்.” பலனின்றி அவன் மேற்கொண்டு ‘பட்டென' அக்கிழவியின் மணிக்கட்டைப் பார்த்து சுட்டான்! இடக்கையிலிருந்து ரத்தம் வழிந்தது! வலது கைகளால் மட்டும் கொடிக் கம்பை ஏந்தி கிழவி முன்னேறத் தொடங்கினாள்! மற்றொரு குண்டு அவளது வலக் கையையும் துளைத்தது! அசராத அக்கிழவியின் நெஞ்சைப் பார்த்து சுட்டான் அந்த நயவஞ்சகன்.

காந்தி பூரியின் சரிந்த உடல், மூவர்ணக் கொடியை ஏந்தி, வாய் வந்தே மாதரம், வந்தே மாதரம் என கோஷமிட்டபடி அந்த காவல் நிலையத்தின் உச்சியில் வெட்டிய ‘கொடி மரம் போல்' சாய்ந்தது! முதுமையிலும் இள நெஞ்சமும் வேகமும், வீரமும் கொண்ட இந்த வீரக்கிழவிக்கு நமது நாடு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது! இதேபோல், நாட்டில் கொடி காத்த மாதர்கள் எத்தனையோ பேர்!
விடுதலை வேட்கைக்கு வயதில்லை! உண்மைதான். அதை இந்த காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ராவின் கதை மீண்டும் நிரூபிக்கிறது.