கோவில் கதைகள் என்ற தலைப்பில் வல்லமை.காம் வலைத்தளத்தில் எனது கட்டுரைகள் வெளிவருகின்றன.
இம்மாதக் கட்டுரை, திருவையாறு ஐயாறப்பர் கோயில் புனரமைப்புப் பற்றியது.
மேலே படிக்க இங்கே சொடுக்கவும்.
வல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி!
கோவில் கதைகள் என்ற தலைப்பில் வல்லமை.காம் வலைத்தளத்தில் எனது கட்டுரைகள் வெளிவருகின்றன.
இம்மாதக் கட்டுரை, திருவையாறு ஐயாறப்பர் கோயில் புனரமைப்புப் பற்றியது.
மேலே படிக்க இங்கே சொடுக்கவும்.
நிஜ நிகழ்வுகள்:
கோவில் புனரமைப்புகளுக்கு போகும்போது நடக்கும் நிஜக் கதைகள்.
வல்லமை இணையதளத்தில் முதல் கதை இதோ
மேலும் Nano technologyயின் மூலம் 100% கிருமிகள் வடிகட்டுதலும், உப்பை நீக்கும் பணியிலும், இந்த களிமண்ணாலான வடிகட்டியை மேம்படுத்த சிந்தனை மனதில் உள்ளது. Nano technology நிபுணர்கள் கட்டாயம் நம் மின் தளத்தில் உள்ளனர்.இருந்தால், என்னுடன் தனிமடலில் தொடர்பு கொண்டால், மேற்கொண்டு இன்னும் சிறப்பாக இதை வடிவமைக்க முடியும். தொடர்புக்கு: naturalfilter@gmail.com

புராதன சின்னங்கள், ஆலயங்களில் ஆபத்துமிக்க sand blasting எனும் சுத்தம் செய்யும் முறையை கண்டித்து பல இடங்களில் நாம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.
தமிழ்ஹிந்து.காமில் எனது கட்டுரை
அதற்கு உரமூட்ட எழுத்தாளர் ஜயமோஹனின் கட்டுரைகள்-1, 2 மற்றும் 3
பிறந்த நாளை விட, எனது திருமண நாளை விடவும் மிக, மிக மகிழ்ச்சி அளிக்கும் நாள் இன்று. (29.04.2011). ஏனெனில், நான் இதுவரை தேடி கிடைக்காத sand blastingஐ தடை செய்ய இந்து அறநிலையத்துறை ஆணையின் நகல் இன்று ஒரு அன்பர் மூலம் என் கைகளில் கிடைத்தது. இதோ அதன் நகல் இங்கே:

இதன் படி பார்த்தால், 2002க்கு பிறகு sand blasting செய்யப்பட்ட கோயில்களின் பொறுப்பாளர்கள் யாராக இருந்தாலும் பணி நீக்கம் செய்யப்படலாம், அல்லவா?
இனி எங்கேனும் sand blasting நடந்தால், இதன் நகலை அந்த கோயில் நிர்வாகிகளிடன் தரவும். Sand blasting செய்யும் கைகளுக்கு இரும்புக் காப்பிடவும்
உடன் எடுத்துச் செல்ல வசதியாக உள்ள படியெடுக்க உதவியாக ஹை ரெஸொலுஷன் நகல் இங்கே
மாதங்கினி ஹஸ்ரா (1869 - 1942) எனும் முதிய பெண்மணிக்கு, காந்தி அடிகளின் பாதையே மூச்சு! அவர் பேச்சே வேத வாக்கு! அவரது அதீத காந்தி மபக்தியால், அவரை எல்லாரும் காந்தி பூரி (BURI) என்றே அழைத்தனர். பூரி என்றால் கிழவி என்று பொருள். அந்த செல்லப் பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது. வெள்ளையனே வெளியெறு இயக்கம் உச்சமடைந்த நேரம். 1942. காந்தி பூரிக்கு 73 வயது. காந்தியடிகள் கைது செய்யப்பட்டார் என்ற செய்தி கேட்டதுமே, ஆத்திரப்பட்டவர்களில் காந்தி பூரியும் ஒருவர். பலர் ஊர்வலங்கள், எதிர்ப்பு கூட்டங்கள் ஆகியவற்றை நடத்தினர். டாம்லுக் காவல் நிலையத்தின் வாயிலில் (இன்றைய மிட்நாபூர் மாவட்டம்), கொடி ஏந்தி காந்தியடிகளை விடுதலை செய்யக்கோரி அறைகூவல் விடுத்தவர்களின் தலைவியாக நின்றார் காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ரா! (செப்டம்பர் 29,1942).காவல் நிலையத்தில் ஏற்றியிருந்த யூனியன் ஜாக் எனும் ஆங்கிலக் கொடியை தூக்கி எறிந்துவிட்டு, நமது மூவர்ணக் கொடியை அங்கே நிறுவக் கோரி கோஷங்கள் எழுந்து உச்ச ஸ்தாயியை அடைந்தது!காந்தி பூரியின் சரிந்த உடல், மூவர்ணக் கொடியை ஏந்தி, வாய் வந்தே மாதரம், வந்தே மாதரம் என கோஷமிட்டபடி அந்த காவல் நிலையத்தின் உச்சியில் வெட்டிய ‘கொடி மரம் போல்' சாய்ந்தது! முதுமையிலும் இள நெஞ்சமும் வேகமும், வீரமும் கொண்ட இந்த வீரக்கிழவிக்கு நமது நாடு அஞ்சல் தலை வெளியிட்டு சிறப்பித்தது! இதேபோல், நாட்டில் கொடி காத்த மாதர்கள் எத்தனையோ பேர்!
விடுதலை வேட்கைக்கு வயதில்லை! உண்மைதான். அதை இந்த காந்தி பூரி எனும் மாதங்கினி ஹஸ்ராவின் கதை மீண்டும் நிரூபிக்கிறது.