15 February 2006

இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!

"இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!" என்பதை கவியோகி சுத்தானந்த பாரதியின் கொள்கைக் கோஷம்!அதற்கு அவர் எழுதிய பாடல் இதோ:-
இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்க!
என்னும் குரலை எழுப்பிடுவோமே
கல்லார் கற்றார் ; காணார் கண்டார் ;
இல்லார் உள்ளார் ; ஈந்தார் ஏற்றார் ;
நல்லார் அல்லார் ; நம்பர் பண்பர் ;
செல்வர் எளியர் ; சிறியார் பெரியார் ;
எவரெவரேனும் எத்திசையேனும்
மானிடர் ஓரின மக்களே யாவர்
ஓர்வான் சூழும் ஓருலகத்தில்
ஓருயிர் துடிப்புடன் ஓரான்மநேயர்
சாதிமதமெனும் பேதமேயின்றித்
தீதறவாழும் செவ்விய மந்திரம்
இன்பமே சூழ்க! எல்லாரும் வாழ்கவே!

No comments: