16 February 2006

தலை நிமிர்ந்து நட நட! கவியோகியின் மற்றொரு பாடல்!

பார் பார் உள்ளே,
யார் யார் நீ
தீர் தீர் புதிரை,
சேர் சேர் கதிரை
தலை நிமிர்ந்து நட நட
வறுமை மடமை பொடிபட
உரிமை உண்மை திடமுறத்
தலை யுயர்த்தித் தாவு முன்!
தமிழ் பெற்ற சிங்கமே
நிலை யுயர்ந்து புகழ் பெறு
நேர்மையான தங்கமே
நாடு வாழவீடு வாழக்
கூடிவாழ நாடுவாய்
ஏடு தந்த நல்லறிவை
நீடு வாழ்வில் ஊக்குவாய்
உயர நோக்குவாய்;
உண்மையின்
அன்புலகை ஆக்குவாய்
ஓம் சுத்த சக்தி ஓம்

No comments: