29 December 2005

அக்றிணை பொருட்கள் கூறும் பாடம் - 5-வளையல்

வளையல்
வட்டம் - என் உருவம், உன் உலகம், கணிதம், மனிதம்
சுட்டதால்- நெகிழ்கிறேன், வளைகிறேன் உருப்பெருகிறேன்- கைப்
பட்டதால்- மகிழ்ந்து, மகிழவைத்து, ஒலித்து மங்களமிசைத்தும்- சொல்ல
விட்ட கதை தெரியுமா?

நாள் கிழமைப் பார்த்து நல்லநேரம் கோர்த்து
வாழை அடிவாழை யென வாழ வந்த பெண்ணின்
கரமேறி, சுரமேறி, கல கல இசையமைத்து
வலம் வந்த நாள் எத்தனை நாள்?

பெண்டிர் கூட, மஞ்சள், குங்குமம்
ரவிக்கையோடு என்றும் வளைய வந்தேன்
ரப்பரோ, கண்ணாடியோ, கவின்மிகு பொன்னோ
எவ்வுரு கொண்டிடினும் ஏற்றமிக கண்டேன்

கைம்பெண்ணாய் ஆனவளின் ஆடவனும் போனபின்
சுற்றுச் சேலை, பட்டுக் கூந்தல், கட்டுப் பூ
இதனோடு என்னையும் பொடித்தெறிந்து
போவெனச் சொல்ல மதிகெட்ட மனித, நீ யார்?
விதி விதித்த வினையோடு விளையாட
துணிந்தனர் பேடிகள்..
நான் வரித்த 'கை'ம்பெண், அவள் மனம், இசைவு
கண்கள் கசியும் பல மவுன அலறல்கள்...
வளையல் நானும், என்னொத்தவரும்
களையப் படுவது ஏன்?
களையப் பட வேண்டிய தற்குறி
வழக்கங்களை, கரும்புகையடித்த
மனங்களை,க்... களை!!