அத்தனையும் 'விடுதலை'க் கற்றால்தான் நிஜ விடுதலை!
வருகைதரும் நேரம் உயிர்மூச்சு பெற்றுவிடுதலை
வளருகின்ற தூரம் வாழ்வைக் வாழக் கண்டுவிடுதலை
காணும் வாழ்வில் கல்வி காதல் கடமை கற்றுவிடுதலை
கண்டபின்னர் வந்த தூரம் திரும்பிப் பார்த்துவிடுதலை
காணும் பொருள் யாவற்றையும் உடன் பெற்றுவிடுதலை
பெற்றபின்னர் அத்தனையும் இயைந்து றந்துவிடுதலை
துறக்கும் நிலை போகும் மனம் முற்றும் துள்ளிவிடுதலை
கண்டிடும் நாள்தான் எமக்கு முற்றிலுமாய் விடுதலை!
வல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி!
16 October 2006
தேன்கூடு போட்டி - விடுதலை
விடுதலை நாடினால் விடுதலை!
உட்புகும் காற்றை மூச்சாகிவிடுதலை
கற்றிடும் கூற்றைப் பேச்சாகிவிடுதலை
நட்டிடும் நாற்றை கனிக்கவிடுதலை
விட்டுவி ட்டாடும் கூத்தாகிவிடுதலை
காணாத கண்களை தேற்றிவிடுதலை
காட்டும் வித்தைபல காட்டிவிடுதலை
வேணாத ஈட்டுதல் நீட்டிவிடுதலை
என்றுநீ தெரிந்தே ஓட்டிவிடுதலை
காணும் மாந்தர்மனம் மாற்றிவிடுதலை
கண்டபொருள் யாவும் போற்றிவிடுதலை
உணரு(ம்) மனமதை உட்காணவிடுதலை
புணரும் சட்டையை கழற்றிவிடுதலை
வாடிடும் நாடிதில் வளர்ந்துவிடுதலை
தேடிடும் கோடிகள் கூட்டிவிடுதலை
சாடிடும் மதப்பேய் ஓட்டிவிடுதலை
நாடினால் நாடிதில் வரும் நிஜவிடுதலை!
உட்புகும் காற்றை மூச்சாகிவிடுதலை
கற்றிடும் கூற்றைப் பேச்சாகிவிடுதலை
நட்டிடும் நாற்றை கனிக்கவிடுதலை
விட்டுவி ட்டாடும் கூத்தாகிவிடுதலை
காணாத கண்களை தேற்றிவிடுதலை
காட்டும் வித்தைபல காட்டிவிடுதலை
வேணாத ஈட்டுதல் நீட்டிவிடுதலை
என்றுநீ தெரிந்தே ஓட்டிவிடுதலை
காணும் மாந்தர்மனம் மாற்றிவிடுதலை
கண்டபொருள் யாவும் போற்றிவிடுதலை
உணரு(ம்) மனமதை உட்காணவிடுதலை
புணரும் சட்டையை கழற்றிவிடுதலை
வாடிடும் நாடிதில் வளர்ந்துவிடுதலை
தேடிடும் கோடிகள் கூட்டிவிடுதலை
சாடிடும் மதப்பேய் ஓட்டிவிடுதலை
நாடினால் நாடிதில் வரும் நிஜவிடுதலை!
03 September 2006
இன்னும் இருக்கிறது ஆகாயம்! poetry for T.sangam competition
கரிமல எரிவகை மாசுகள் நிறைந்தும்
சிறுசி றுகருப்பொருள் நச்சென ஆயியும்
கோளில் ஒன்று குறைந்ததென் றாகியும்
சூழல் நசிந்து ஊழல் பெறுகினும் - பாரில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
தாய்காட்டி உணவூட்டும் நிலவு மெங்கே
கட்ட டங்கள்கண் மறைக்க வானமெங்கே
எட்டிப் பார்க்கும் வானவில்லின் ஜாலமெங்கே?
காலை மாலை கதிரவனின் வர்ணமுமெங்கே? - எனினும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
கனவுகள் தகர்க்க கிடைக்கா கல்வி,
கிடைத்தும் மனதுக்கு எட்டா வேலை
எட்டியும் பிடிக்கா சூழல் எல்லாம்
விட்டு விடுதலையாகி பறக்கும் எல்லை - விதிக்க
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
கற்பனை விரிய எல்லையை விரிக்க
பறந்தும் உயர எட்டா நிலையை
எண்ணிய படியே எங்கும் பறக்க
விண்ணதின் உச்சம் கண்டிட விழைய - உயர்த்த
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
அப்துல் கலாமெனும் மீனவ நண்பன்
அண்டம் துளைக்க விண்ணியல் படிக்க
கற்பனை கனவுகள் நனவென வாக்க
கல்பனா சாவ்லா சாவிலும் வாழ்ந்திட - திறந்து
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
தொடுதல் இன்றி எல்லை காட்டும்
விடுதல் வந்தால் விடுதலை நாட்டும்
ஆதாய மின்றி ஆதார மின்றி
அதுவே அதற்கு சாட்சியமாக - எங்கும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
சிறுசி றுகருப்பொருள் நச்சென ஆயியும்
கோளில் ஒன்று குறைந்ததென் றாகியும்
சூழல் நசிந்து ஊழல் பெறுகினும் - பாரில்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
தாய்காட்டி உணவூட்டும் நிலவு மெங்கே
கட்ட டங்கள்கண் மறைக்க வானமெங்கே
எட்டிப் பார்க்கும் வானவில்லின் ஜாலமெங்கே?
காலை மாலை கதிரவனின் வர்ணமுமெங்கே? - எனினும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
கனவுகள் தகர்க்க கிடைக்கா கல்வி,
கிடைத்தும் மனதுக்கு எட்டா வேலை
எட்டியும் பிடிக்கா சூழல் எல்லாம்
விட்டு விடுதலையாகி பறக்கும் எல்லை - விதிக்க
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
கற்பனை விரிய எல்லையை விரிக்க
பறந்தும் உயர எட்டா நிலையை
எண்ணிய படியே எங்கும் பறக்க
விண்ணதின் உச்சம் கண்டிட விழைய - உயர்த்த
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
அப்துல் கலாமெனும் மீனவ நண்பன்
அண்டம் துளைக்க விண்ணியல் படிக்க
கற்பனை கனவுகள் நனவென வாக்க
கல்பனா சாவ்லா சாவிலும் வாழ்ந்திட - திறந்து
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
தொடுதல் இன்றி எல்லை காட்டும்
விடுதல் வந்தால் விடுதலை நாட்டும்
ஆதாய மின்றி ஆதார மின்றி
அதுவே அதற்கு சாட்சியமாக - எங்கும்
இன்னும் இருக்கிறது ஆகாயம்!
19 August 2006
தேன்கூடு போட்டி: தாயுமானார் அவரே தந்தையுமானார்!
முதுகில் பெரிய கட்டி; காலில் போலியோ தாக்கம்; கருமை நிறம்; நெஞ்சில் ஈரமின்றியோ அல்லது வெளியில் சொல்லிக்கொள்ளுமாறு இல்லாத ஒரு உயிரை உயிர்பித்ததாலோ, அந்த பிஞ்சுக் குழந்தையை தெருவில் விட்டுப் போய்விடுகிறாள் ஒரு பெண்.(தாய் எனச்சொல்ல மனம் ஒப்பவில்லை!) கண்டது ஒரு நன்னெஞ்சம்; கொண்டு சென்று, வளர்த்து, புண்ணை போக்கி, கண்ணாய் வளர்த்து பெண்ணாய் ஆக்கி, இன்று பேர் சொல்ல ஒரு பிள்ளையாய், இல்லை இப்படி பேர் சொல்ல பல பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கி, ஆண் தெரசாவாக வாழ்ந்து வருகிறார் "பப்பா" (அப்பா) என எல்லோராலும் அன்பாக அழைக்கப்படும் வித்யாகர்; சென்னை அருகிலுள்ள திருவேற்காட்டிலும் மற்ற பல இடங்களிலும் இன்று வேர்விட்டு ஆலமரமாக தழைத்து ஓங்கும் சேவாலயம், "உதவும் கரங்கள்".
அன்றலர்ந்த மலர்களாக பிஞ்சுக் குழந்தைகள், சில மாதங்களிலேயே கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற முதியோர், புத்தி ஸ்வாதீனமற்ற, சமூகத்தால் பரிகசிக்கப் பட்ட ஆண்கள், பெண்டிர், மற்றும் அங்கேயே வளர்ந்து, சேவை ஆற்றி வரும் பெண்கள், ஆடவர், வளர்ந்து பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர் என் ஒரு உலகத்தையே உருவாக்கியுள்ளார், வித்யாகர். 100 வயது கடந்த மூதாட்டியும் இதில் ஒருவர்!
தினமும் எல்லாரையும் பற்றி விசாரித்து, நலம் கண்டு, சிறு தொழில் முனைந்து, அதில் அவரது மக்கள் பணியாற்ற துணை நின்று, பம்பரமாய் சுழலும் இந்த 'பப்பா'வை பார்க்கையில், ஒரு தாய் செய்யக்கூடிய அத்தனையும், தந்தையாகிய இவரே எப்படி செய்கிறார் என மனம் வியக்கிறது!
மேற்படி பொறுப்பு, சமீபத்தில் ஒரு நற்செயலால், முழுமை அடைந்துள்ளது! எப்படி என்று பார்ப்போமா?
தான் வளர்த்த இரு பெண்களுக்கு அடுத்த அடுத்த மாதங்களிலேயே, சம்ப்¢ரதாயம் மாறாமல், பத்திரிகை அடித்து, கல்யாண மண்டபத்தில், அக்கினி வளர்த்து அருந்ததி பார்த்து, உற்றார், உறவினர், இரு வீடுகளிலிருந்தும் வர, தன்னை பெண்ணின் தந்தையென ப்ரகடனப் படுத்தி, அருமையாய் இரு திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் இந்தத் "தந்தை" வித்யாகர்!
எனக்கு இந்த செய்தி எப்படி தெரியும்? எங்கள் வீட்டில் குழந்தைகளின் பிறந்த நாளானால், கேக் வெட்டி, கைதட்டி, வசதியானவர்களை அழைத்து விருந்துண்ணும் பழக்கமில்லை. அரிசி மூட்டைகள், இனிப்புகள், கைக்குழந்தைகளுக்கு புதிய சட்டைகள் வாங்கிக் கொண்டு, எல்லாருமாய் "உதவும் கரங்கள்" க்கு சென்று, எல்லாருமாய் சேர்ந்துண்டு, நம் வீட்டுக் குழந்தைகளுக்கும், இல்லாதாருடன் பகிர்ந்துண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்;
மாதா மாதம் வீட்டில் சேரும் நாளிதழ்கள், பழைய, ஆனால் நன்றாக இருக்கும் துணிமணிகள், மேசை நாற்காலி, குழந்தைகள் பொம்மைகள், என எதைக் குடுத்தாலும், அவர்களே ஒரு வண்டியில் வந்து பொருட்களை எடுத்து செல்கின்றனர்! வரும் நபர், கையோடு ஒரு ரசீது புத்தகமும் கொண்டு வருகிறார். அத்தனை பொருட்களையும் பட்டியலிட்டு எழுதி, 'பெற்றுக்கொண்டோம், நன்றி' என எழுதி கையொப்பமிட்டு, ரசீது தருகிறார். அப்படி ஒரு முறை வரும்போது, சந்தோஷமாக, "அய்யா, எங்க தங்கச்சிக்கு கல்யாணம்" எனக் கூறி ஒரு பத்திரிகையை நீட்டினார்! மகிழ்ந்த என் தாய், உடனே, ஒரு புது பட்டுப்புடவையை கல்யாணப் பெண்ணுக்குத் தந்தார். அதற்கும், ஓரிரு நாட்களில், திரு. வித்யாகரிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு நன்றிக் கடிதம் இல்லம் தேடி வந்தது!
மறுமுறை பிறந்தநாள் கொண்டாட செல்கையில், மற்றொமொரு பெண்ணின் திருமண பத்திரிகையையும் தந்தார் 'பப்பா' வித்யாகர். மகிழ்ச்சி எங்கள் இல்லத்தையும் தொற்றிக் கொண்டது.
அதனால்தான், பெறாவிட்டாலும், குழந்தைகளுக்கு ஒரு தாயாயும், தந்தையுமாக, பெரியவர்களுக்கு ஒரு நல்ல சகோதரனாக, முதியவர்க்கு ஒரு நல்ல மகனாக, மன நலம் குன்றியவர்க்கு ஒரு நல்ல மருத்துவனாக வாழ்ந்து வரும் திரு.'பப்பா' வித்யாகரை பற்றி, இந்த "உறவுகள்" பற்றிய கட்டுரையில் எழுதியுள்ளேன்!
அந்த ஆலமரத்தின் சுட்டி http://www.udavumkarangal.org
முகவரி: திருவேற்காட்டில் நுழைந்து, "உதவும் கரங்கள்" என்றாலே போதுமே!
எல்லாரும் இத்தகைய நல்லார் பணியை ஆதரித்து வரவேண்டுமெனும் ஆவலில் இந்த கட்டுரை உருவாகியுள்ளது.
அன்றலர்ந்த மலர்களாக பிஞ்சுக் குழந்தைகள், சில மாதங்களிலேயே கைவிடப்பட்ட குழந்தைகள், ஆதரவற்ற முதியோர், புத்தி ஸ்வாதீனமற்ற, சமூகத்தால் பரிகசிக்கப் பட்ட ஆண்கள், பெண்டிர், மற்றும் அங்கேயே வளர்ந்து, சேவை ஆற்றி வரும் பெண்கள், ஆடவர், வளர்ந்து பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர் என் ஒரு உலகத்தையே உருவாக்கியுள்ளார், வித்யாகர். 100 வயது கடந்த மூதாட்டியும் இதில் ஒருவர்!
தினமும் எல்லாரையும் பற்றி விசாரித்து, நலம் கண்டு, சிறு தொழில் முனைந்து, அதில் அவரது மக்கள் பணியாற்ற துணை நின்று, பம்பரமாய் சுழலும் இந்த 'பப்பா'வை பார்க்கையில், ஒரு தாய் செய்யக்கூடிய அத்தனையும், தந்தையாகிய இவரே எப்படி செய்கிறார் என மனம் வியக்கிறது!
மேற்படி பொறுப்பு, சமீபத்தில் ஒரு நற்செயலால், முழுமை அடைந்துள்ளது! எப்படி என்று பார்ப்போமா?
தான் வளர்த்த இரு பெண்களுக்கு அடுத்த அடுத்த மாதங்களிலேயே, சம்ப்¢ரதாயம் மாறாமல், பத்திரிகை அடித்து, கல்யாண மண்டபத்தில், அக்கினி வளர்த்து அருந்ததி பார்த்து, உற்றார், உறவினர், இரு வீடுகளிலிருந்தும் வர, தன்னை பெண்ணின் தந்தையென ப்ரகடனப் படுத்தி, அருமையாய் இரு திருமணங்களை நடத்தி வைத்துள்ளார் இந்தத் "தந்தை" வித்யாகர்!
எனக்கு இந்த செய்தி எப்படி தெரியும்? எங்கள் வீட்டில் குழந்தைகளின் பிறந்த நாளானால், கேக் வெட்டி, கைதட்டி, வசதியானவர்களை அழைத்து விருந்துண்ணும் பழக்கமில்லை. அரிசி மூட்டைகள், இனிப்புகள், கைக்குழந்தைகளுக்கு புதிய சட்டைகள் வாங்கிக் கொண்டு, எல்லாருமாய் "உதவும் கரங்கள்" க்கு சென்று, எல்லாருமாய் சேர்ந்துண்டு, நம் வீட்டுக் குழந்தைகளுக்கும், இல்லாதாருடன் பகிர்ந்துண்ணும் பழக்கத்தை ஏற்படுத்தி வருகிறோம்;
மாதா மாதம் வீட்டில் சேரும் நாளிதழ்கள், பழைய, ஆனால் நன்றாக இருக்கும் துணிமணிகள், மேசை நாற்காலி, குழந்தைகள் பொம்மைகள், என எதைக் குடுத்தாலும், அவர்களே ஒரு வண்டியில் வந்து பொருட்களை எடுத்து செல்கின்றனர்! வரும் நபர், கையோடு ஒரு ரசீது புத்தகமும் கொண்டு வருகிறார். அத்தனை பொருட்களையும் பட்டியலிட்டு எழுதி, 'பெற்றுக்கொண்டோம், நன்றி' என எழுதி கையொப்பமிட்டு, ரசீது தருகிறார். அப்படி ஒரு முறை வரும்போது, சந்தோஷமாக, "அய்யா, எங்க தங்கச்சிக்கு கல்யாணம்" எனக் கூறி ஒரு பத்திரிகையை நீட்டினார்! மகிழ்ந்த என் தாய், உடனே, ஒரு புது பட்டுப்புடவையை கல்யாணப் பெண்ணுக்குத் தந்தார். அதற்கும், ஓரிரு நாட்களில், திரு. வித்யாகரிடமிருந்து தனிப்பட்ட முறையில் ஒரு நன்றிக் கடிதம் இல்லம் தேடி வந்தது!
மறுமுறை பிறந்தநாள் கொண்டாட செல்கையில், மற்றொமொரு பெண்ணின் திருமண பத்திரிகையையும் தந்தார் 'பப்பா' வித்யாகர். மகிழ்ச்சி எங்கள் இல்லத்தையும் தொற்றிக் கொண்டது.
அதனால்தான், பெறாவிட்டாலும், குழந்தைகளுக்கு ஒரு தாயாயும், தந்தையுமாக, பெரியவர்களுக்கு ஒரு நல்ல சகோதரனாக, முதியவர்க்கு ஒரு நல்ல மகனாக, மன நலம் குன்றியவர்க்கு ஒரு நல்ல மருத்துவனாக வாழ்ந்து வரும் திரு.'பப்பா' வித்யாகரை பற்றி, இந்த "உறவுகள்" பற்றிய கட்டுரையில் எழுதியுள்ளேன்!
அந்த ஆலமரத்தின் சுட்டி http://www.udavumkarangal.org
முகவரி: திருவேற்காட்டில் நுழைந்து, "உதவும் கரங்கள்" என்றாலே போதுமே!
எல்லாரும் இத்தகைய நல்லார் பணியை ஆதரித்து வரவேண்டுமெனும் ஆவலில் இந்த கட்டுரை உருவாகியுள்ளது.
18 August 2006
தேன்கூடு போட்டி- தாய்
தேன்கூடு போட்டி - அந்த உறவுக்கு பெயரென்ன?
கலாவதி கார்த்திகேயன் என்ற பெயர். இதில் புதுமை என்ன என்கிறீர்களா? கார்த்திகேயன் தந்தையோ அல்லது கணவனோ அல்ல!
மகன்!
http://vijayanagar.blogspot.com/ எனும் வலை பதிவில், கார்த்திகேயன் எப்படி எழுதுவாரோ, அதே பாணியை பின் பற்றி, தன்னைத் தனது மகனாக பாவித்து, அந்தத் தாய் கடந்த இரு மாதங்களாக பதிவுகள் எழுதுகிறார். கார்த்திகேயனின் நண்பர்களோடு சேர்ந்து ஒரு அறக் கட்டளை நிறுவி அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முயன்று வருகிறார்!
எம்.ஏ,எம்.பில் (ஆங்கிலம்) மற்றும் எம்.பி.ஏ படித்த அந்தப் பள்ளி ஆசிரியை, ஓராண்டு காலமாக விறுப்பு ஓய்வு பெற்று, மகனின் பெயரை தன்னுடன் இணைத்துக்கொண்டு, மகன் என்ன பணிகளிலெல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரோ அந்த பணியிலெல்லாம், தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, வாழ்கிறார், மகனை வாழவைக்கிறார்- ஏன்? அந்த உறவுக்கு பெயரென்ன?
மகன் கார்த்திகேயன் துடிப்பான இளைஞர். கணினி பொறியாளர்; அமெரிக்கா சென்று திரும்பி வந்த, அடக்கமான, உறவினர்களின் செல்லப் பிள்ளை. அலுவலகத்திலும் நல்ல பெயர்! நண்பர்களிடையேயும் நல்ல பெயர். தீயபழக்கங்கள் ஏதும் இல்லை. வரலாற்றுப் பிரியர்! அவர் செல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களே தென்னிந்தியாவில் இல்லை எனலாம்! அவருடைய கணிணியிலுள்ள folders புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன! அதனை தனது இடுகைகளில் எழுதியும், வரலாறு.காம் இணையப் பத்திரிகைக்கும் அனுப்பி வந்துள்ளார்!
2005- ஆகஸ்ட் 26ஆம் தேதி. காலை அலுவலகம் சென்ற கார்த்திகேயன், சாலை விபத்தில்- காலமானார்!
இல்லை, என்னுடன், என்னுள் வாழ்கிறான் என புதியமுகம் பூண்டு வாழ்கிறார் கலாவதி கார்த்திகேயன்! பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஆசையாக மகன் வாங்கித் தந்த பெங்களூர் வீட்டை விட்டு, சென்னை வந்து, தனியே, அறை எங்கும் கார்த்திகேயனின் படங்களை ஒட்டி, சதா அவர் நினைவாக வாழும் - அந்த உறவுக்குப் பெயரென்ன?
968 உறுப்பினர் கொண்ட பொன்னியின் செல்வன் யாஹ¥ குழுமம். பல மாநிலங்களில், ராஜ ராஜனின் சதயத் திருநாளை ஒட்டி, உறுப்பினர்கள் விழாக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் பொருட்டு எல்லாப் பழைய உறுப்பினர்கள், நீண்ட காலமாக தொடர்பு அற்றவர்களுக்கு ஒரு மடல் அனுப்பப்பட்ட மடலுக்கு வந்த பொன்னியின் செல்வியின் மடல் எல்லா உறுப்பினரையும் கலங்க வைத்து விட்டது!
பொன்னியின் செல்வன் யாஹ¥ குழுமத்தில், மகன் கார்த்திகேயனின் புனைப்பெயரை ஒத்து (பொன்னியின் செல்வன் - கார்த்திகேயனின் மின்னஞ்சல் பெயர்; தாயார் கலாவதியின் மின்னஞ்சல் பெயர் பொன்னியின் செல்வி! )
அவரெழுதியதன் சாராம்சம்:
"என் பெயர் பொன்னியின் செல்வி. உங்கள் உறுப்பினர் கார்த்திக்கின் தாய். எனக்கு கணினி இயக்கிப் பழக்கமில்லை. இப்போதுதான்,மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறேன்; ஆம், கடந்த ஆண்டு என் மகன் மாண்டான் என என்றும் நினைக்க முடியாமல், ஆனால் அவனை நேரில் பார்க்கவும் முடியாமல், நான் தவித்து வருகையில், மெதுவாக அவனது கணினியைத் திறந்து கொஞ்சம்,கொஞ்சமாக இயக்க பழகி வருகிறேன். உங்கள் குழு என் கண்ணில் பட்டது; எனது மகன்தான் நடத்துகிறான் என நினைத்து திறக்க முற்படுகையில், உங்கள் குழுவை பற்றி தெரிந்து கொள்ளவும், அதில் எனது மகனும் ஒரு முக்கிய உறுப்பினர் என்பதையும் தெரிந்து கொண்டேன். எத்தனை செய்திகள் அளித்துள்ளான் என்பதை எண்ணி வியக்கிறேன்.என் மகன் அளவுக்கு சுவையாக எழுத முடியாவிட்டாலும், ஏதோ, என்னால் முடிந்த வரை இதில் பங்கேற்க முயல்கிறேன். வணக்கம்!"
அதற்கு எத்தனை பின்னூட்டங்கள் வந்தன என நீங்களே யூகித்துக் கொள்ளலாம். நான் அந்தத் தாயைப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றேன்.
இரண்டரை மணி நேரங்கள்! அந்தத் தாய் சொன்னது கேட்கக் கேட்க மலைப்பாக இருந்தது! தந்தை 2000 ஆண்டே காலமானதும், மகன் கார்த்திக் (கார்த்திகேயனை அவர் அப்படித்தான் அழைக்கிறார்!) அவரை எப்பொழுதும் அரவணைத்து தாய்க்கு எந்த ப்ரச்னைகளும் வரக்கூடாது என வாழ்ந்த "தாய்ச் செல்லம்".
தாய் மகன் இருவருக்குமே சரித்திர நாவல்கள் மிகவும் பிடிக்கும்! இருவரும், நண்பர்கள் போல் கேலியும் கும்மாளமும் செய்து வாழ்ந்ததாகவே சொல்கிறார்,கலாவதி!
கவிதை, கதை, வரலற்று தலங்களுக்குச் சென்று எழுதும் பயணக் கட்டுரை, புகைப் படங்கள், கார், பைக், அமெரிக்க பயணம், டெல் நிறுவனத்தில் நல்ல பணி,சொந்த வீடு - என மிகவும் வேகமாக fast forward modeல் வளர்ந்த அந்த வாழ்க்கை, எப்படி திடீரென முடிந்து போகும்?
ஏன் இப்படி? என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில், மகனாகவே வாழ முயற்சிக்கும் அந்த தாயின் உறவுக்கு என்ன பெயர் வைப்பது? அந்த உறவுக்கு பேரென்ன???
மகன்!
http://vijayanagar.blogspot.com/ எனும் வலை பதிவில், கார்த்திகேயன் எப்படி எழுதுவாரோ, அதே பாணியை பின் பற்றி, தன்னைத் தனது மகனாக பாவித்து, அந்தத் தாய் கடந்த இரு மாதங்களாக பதிவுகள் எழுதுகிறார். கார்த்திகேயனின் நண்பர்களோடு சேர்ந்து ஒரு அறக் கட்டளை நிறுவி அனாதைக் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முயன்று வருகிறார்!
எம்.ஏ,எம்.பில் (ஆங்கிலம்) மற்றும் எம்.பி.ஏ படித்த அந்தப் பள்ளி ஆசிரியை, ஓராண்டு காலமாக விறுப்பு ஓய்வு பெற்று, மகனின் பெயரை தன்னுடன் இணைத்துக்கொண்டு, மகன் என்ன பணிகளிலெல்லாம் தன்னை ஈடுபடுத்திக் கொள்வாரோ அந்த பணியிலெல்லாம், தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, வாழ்கிறார், மகனை வாழவைக்கிறார்- ஏன்? அந்த உறவுக்கு பெயரென்ன?
மகன் கார்த்திகேயன் துடிப்பான இளைஞர். கணினி பொறியாளர்; அமெரிக்கா சென்று திரும்பி வந்த, அடக்கமான, உறவினர்களின் செல்லப் பிள்ளை. அலுவலகத்திலும் நல்ல பெயர்! நண்பர்களிடையேயும் நல்ல பெயர். தீயபழக்கங்கள் ஏதும் இல்லை. வரலாற்றுப் பிரியர்! அவர் செல்லாத வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்களே தென்னிந்தியாவில் இல்லை எனலாம்! அவருடைய கணிணியிலுள்ள folders புகைப்படங்களால் நிரம்பி வழிகின்றன! அதனை தனது இடுகைகளில் எழுதியும், வரலாறு.காம் இணையப் பத்திரிகைக்கும் அனுப்பி வந்துள்ளார்!
2005- ஆகஸ்ட் 26ஆம் தேதி. காலை அலுவலகம் சென்ற கார்த்திகேயன், சாலை விபத்தில்- காலமானார்!
இல்லை, என்னுடன், என்னுள் வாழ்கிறான் என புதியமுகம் பூண்டு வாழ்கிறார் கலாவதி கார்த்திகேயன்! பணியிலிருந்து ஓய்வு பெற்று, ஆசையாக மகன் வாங்கித் தந்த பெங்களூர் வீட்டை விட்டு, சென்னை வந்து, தனியே, அறை எங்கும் கார்த்திகேயனின் படங்களை ஒட்டி, சதா அவர் நினைவாக வாழும் - அந்த உறவுக்குப் பெயரென்ன?
968 உறுப்பினர் கொண்ட பொன்னியின் செல்வன் யாஹ¥ குழுமம். பல மாநிலங்களில், ராஜ ராஜனின் சதயத் திருநாளை ஒட்டி, உறுப்பினர்கள் விழாக்கள் ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன் பொருட்டு எல்லாப் பழைய உறுப்பினர்கள், நீண்ட காலமாக தொடர்பு அற்றவர்களுக்கு ஒரு மடல் அனுப்பப்பட்ட மடலுக்கு வந்த பொன்னியின் செல்வியின் மடல் எல்லா உறுப்பினரையும் கலங்க வைத்து விட்டது!
பொன்னியின் செல்வன் யாஹ¥ குழுமத்தில், மகன் கார்த்திகேயனின் புனைப்பெயரை ஒத்து (பொன்னியின் செல்வன் - கார்த்திகேயனின் மின்னஞ்சல் பெயர்; தாயார் கலாவதியின் மின்னஞ்சல் பெயர் பொன்னியின் செல்வி! )
அவரெழுதியதன் சாராம்சம்:
"என் பெயர் பொன்னியின் செல்வி. உங்கள் உறுப்பினர் கார்த்திக்கின் தாய். எனக்கு கணினி இயக்கிப் பழக்கமில்லை. இப்போதுதான்,மெதுவாக இயல்பு நிலைக்குத் திரும்புகிறேன்; ஆம், கடந்த ஆண்டு என் மகன் மாண்டான் என என்றும் நினைக்க முடியாமல், ஆனால் அவனை நேரில் பார்க்கவும் முடியாமல், நான் தவித்து வருகையில், மெதுவாக அவனது கணினியைத் திறந்து கொஞ்சம்,கொஞ்சமாக இயக்க பழகி வருகிறேன். உங்கள் குழு என் கண்ணில் பட்டது; எனது மகன்தான் நடத்துகிறான் என நினைத்து திறக்க முற்படுகையில், உங்கள் குழுவை பற்றி தெரிந்து கொள்ளவும், அதில் எனது மகனும் ஒரு முக்கிய உறுப்பினர் என்பதையும் தெரிந்து கொண்டேன். எத்தனை செய்திகள் அளித்துள்ளான் என்பதை எண்ணி வியக்கிறேன்.என் மகன் அளவுக்கு சுவையாக எழுத முடியாவிட்டாலும், ஏதோ, என்னால் முடிந்த வரை இதில் பங்கேற்க முயல்கிறேன். வணக்கம்!"
அதற்கு எத்தனை பின்னூட்டங்கள் வந்தன என நீங்களே யூகித்துக் கொள்ளலாம். நான் அந்தத் தாயைப் பார்க்க அவர் வீட்டுக்குச் சென்றேன்.
இரண்டரை மணி நேரங்கள்! அந்தத் தாய் சொன்னது கேட்கக் கேட்க மலைப்பாக இருந்தது! தந்தை 2000 ஆண்டே காலமானதும், மகன் கார்த்திக் (கார்த்திகேயனை அவர் அப்படித்தான் அழைக்கிறார்!) அவரை எப்பொழுதும் அரவணைத்து தாய்க்கு எந்த ப்ரச்னைகளும் வரக்கூடாது என வாழ்ந்த "தாய்ச் செல்லம்".
தாய் மகன் இருவருக்குமே சரித்திர நாவல்கள் மிகவும் பிடிக்கும்! இருவரும், நண்பர்கள் போல் கேலியும் கும்மாளமும் செய்து வாழ்ந்ததாகவே சொல்கிறார்,கலாவதி!
கவிதை, கதை, வரலற்று தலங்களுக்குச் சென்று எழுதும் பயணக் கட்டுரை, புகைப் படங்கள், கார், பைக், அமெரிக்க பயணம், டெல் நிறுவனத்தில் நல்ல பணி,சொந்த வீடு - என மிகவும் வேகமாக fast forward modeல் வளர்ந்த அந்த வாழ்க்கை, எப்படி திடீரென முடிந்து போகும்?
ஏன் இப்படி? என்ற கேள்விக்கு விடை தேடும் முயற்சியில், மகனாகவே வாழ முயற்சிக்கும் அந்த தாயின் உறவுக்கு என்ன பெயர் வைப்பது? அந்த உறவுக்கு பேரென்ன???
21 July 2006
கோவில்கள் மறையும் அபாயம்! - 2
http://www.pkblogs.com/maraboorjc/2006_04_02_maraboorjc_archive.html
எனும் வலைத்தளத்தில் ( என்ன செய்ய சுற்றி வளைத்து மூக்கைத் தொடுமாறு நமது முட்டாள் அரசாங்கம் நம்மை பாடாய் படுத்துகிறது! 18 குறிப்பிட்ட வலை தளைத்தை தடை செய்வதற்கு பதில், எல்லா ப்ளாக்ஸ்பாட் வலைத்தளங்களையும் ப்ளாக் அவுட் (Black-out) செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை!! ) .. விஷயத்துக்கு வருகிறேன்..
மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் கோயில்கள் மறையும் அபாயத்தைப்பற்றி எழுதியிருந்தேன். பின்னூட்டத்தில், 'குன்றத்தூரான்' என்ற பெயரில், ஒருவர் எங்கள் குழு செய்யும் உழவாரப் பணியை கேலி செய்து பேசினார்). அனாமதேயமாக, தனது தொலைப் பேசி எண், மின்னஞ்சல் ஏதும் தராமல், அவர் குறிப்பிட்ட நவக்ரஹஸ்தலங்களை எங்கள் R.E.A.C.H குழு பார்வையிட்டு வந்தது. 'குன்றத்தூரான்' குறிப்பிட்ட கோவூர் சிவாச்சாரியாரான தியாகராஜனின் ஒத்திழைப்போடு எல்லா கோவில்களையும் பார்வையிட்டோம். அவர் கூறியதுபோல், எந்த கோயிலும் 'கேட்பாரற்று கிடக்க'வில்லை!! மாறாக, ஒரே ஒரு கோயிலைத்தவிர (கெருகம்பாக்கம்) மற்றவை நன்றாகவே இருந்தது. மக்கள் வராததற்குக் காரணம், சரியான விளம்பரம் இல்லாததே!
எங்கள் அதிர்ஷ்டம், நாங்கள் அக்கோவில்களை பார்த்துவிட்டு வந்த மறுவாரமே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை தலைவரான திரு. இறையன்பு IAS (என்ன பெயர் பொருத்தம்!!) ப்ல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்களை அழைத்து, ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், எங்கள் R.E.A.C.H குழுவின் தலைவரான, முன்னாள் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழக திரு.டாக்டர்.டி.சத்யமூர்த்தி ஒரு பவர் பாயிண்ட் விளக்கவுரை அளித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர், மற்றும் செயலர் (இறையன்பு அவர்கள்) மற்றும் ஏனைய பெருந்தலைகள் அங்கே அமர்ந்திருக்க, அவ்விளக்கவுரையில் நமது சென்னையைச் சுற்றியுள்ள நவக்ரஹக்கோவில்களின் படங்களும், விளக்கவுரையும் இடம் பெற்றிருந்தன. மறு வாரமே, சுற்றலாத்துறையைச் சேர்ந்த அதிகாரி ராஜசேகர் அவர்கள், நம்முடன் தொடர்பு கொண்டு அக்கோவில்களை பற்றிய விபரங்களையும், போகும் வழிகளையும் கேட்டுத்தெரிந்து கொண்டு, ஏனைய அதிகாரிகளுடன் சுற்றிப்பர்ர்த்து வந்து, அத்தலங்களை சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கச் செய்தார். நேற்றைய தினகரம், மதுர்ம் இன்றைய இந்து நாளிதழ்களில் சுற்றலாத் துறையின் சிறப்பு அறிவிப்பில், நபர் ஒருவருக்கு ரூ.150 பெற்றுக்கொண்டு, தமிழக சுற்றலாத்துறையே, இந்நவகிரஹக் கோவில்களை சுற்றிக்காட்ட ஏற்பாடு செதுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், மக்கள் வரவு அதிகரிக்கும். உள்ளூர் மக்கள் பிரசாத, பூசைக்குரிய பொருட்கள் விற்று சுய தொழில் புரிய முனைவர்; அதனால் பணப் புழக்கம் மற்றும் கோவில்களின் நிலைமை சேரமையும் என நம்புவோம். சுற்றலாத்துறை காட்டிய வேகத்தையும், விவேகத்தையும், ஏனைய துறைகளான இந்து அறநிலையத்துறையும், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையும் காட்டினால், சிகப்பு நாடாக்கள் அவிழ்க்கப் பட்டு, கோவில்களில் பூசைகள் தினந்§தோறும் நடைபெறும்; இக்கோவில்களிலிருந்து காணாமல் போகும் கல்வெட்டுச்செய்திகள் உலகெங்கும் அறிய வரும். எல்லாரும் சேர்ந்து இப்பணையை செய்வார்களா?
நீங்களும் இந்த நவக்ரஹ தலங்களை பார்க்க ஆவலாக உள்ளீர்களா? பயணிக்கவும் :-
http://puggy.symonds.net/~madan/navagraha/tour.html
இந்த வலைத்தளத்தில் உள்ள சிகப்புப் புள்ளிகளை சுட்டினால், உங்களை அந்தந்த ஸ்தலங்களுக்கே கொண்டு போகும்!
இப்போதைக்கு எந்த பதிவையும் படிக்க இயலாதவர்கள் மூக்கைச் சுற்றி pkblogs மூலம் முயலலாம்!
எனும் வலைத்தளத்தில் ( என்ன செய்ய சுற்றி வளைத்து மூக்கைத் தொடுமாறு நமது முட்டாள் அரசாங்கம் நம்மை பாடாய் படுத்துகிறது! 18 குறிப்பிட்ட வலை தளைத்தை தடை செய்வதற்கு பதில், எல்லா ப்ளாக்ஸ்பாட் வலைத்தளங்களையும் ப்ளாக் அவுட் (Black-out) செய்தது எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை!! ) .. விஷயத்துக்கு வருகிறேன்..
மேற்குறிப்பிட்ட வலைத்தளத்தில் கோயில்கள் மறையும் அபாயத்தைப்பற்றி எழுதியிருந்தேன். பின்னூட்டத்தில், 'குன்றத்தூரான்' என்ற பெயரில், ஒருவர் எங்கள் குழு செய்யும் உழவாரப் பணியை கேலி செய்து பேசினார்). அனாமதேயமாக, தனது தொலைப் பேசி எண், மின்னஞ்சல் ஏதும் தராமல், அவர் குறிப்பிட்ட நவக்ரஹஸ்தலங்களை எங்கள் R.E.A.C.H குழு பார்வையிட்டு வந்தது. 'குன்றத்தூரான்' குறிப்பிட்ட கோவூர் சிவாச்சாரியாரான தியாகராஜனின் ஒத்திழைப்போடு எல்லா கோவில்களையும் பார்வையிட்டோம். அவர் கூறியதுபோல், எந்த கோயிலும் 'கேட்பாரற்று கிடக்க'வில்லை!! மாறாக, ஒரே ஒரு கோயிலைத்தவிர (கெருகம்பாக்கம்) மற்றவை நன்றாகவே இருந்தது. மக்கள் வராததற்குக் காரணம், சரியான விளம்பரம் இல்லாததே!
எங்கள் அதிர்ஷ்டம், நாங்கள் அக்கோவில்களை பார்த்துவிட்டு வந்த மறுவாரமே, தமிழ்நாடு சுற்றுலாத்துறை தலைவரான திரு. இறையன்பு IAS (என்ன பெயர் பொருத்தம்!!) ப்ல்வேறு துறையைச் சார்ந்த வல்லுநர்களை அழைத்து, ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில், எங்கள் R.E.A.C.H குழுவின் தலைவரான, முன்னாள் தொல்பொருள் ஆராய்ச்சிக் கழக திரு.டாக்டர்.டி.சத்யமூர்த்தி ஒரு பவர் பாயிண்ட் விளக்கவுரை அளித்தார். சுற்றுலாத்துறை அமைச்சர், மற்றும் செயலர் (இறையன்பு அவர்கள்) மற்றும் ஏனைய பெருந்தலைகள் அங்கே அமர்ந்திருக்க, அவ்விளக்கவுரையில் நமது சென்னையைச் சுற்றியுள்ள நவக்ரஹக்கோவில்களின் படங்களும், விளக்கவுரையும் இடம் பெற்றிருந்தன. மறு வாரமே, சுற்றலாத்துறையைச் சேர்ந்த அதிகாரி ராஜசேகர் அவர்கள், நம்முடன் தொடர்பு கொண்டு அக்கோவில்களை பற்றிய விபரங்களையும், போகும் வழிகளையும் கேட்டுத்தெரிந்து கொண்டு, ஏனைய அதிகாரிகளுடன் சுற்றிப்பர்ர்த்து வந்து, அத்தலங்களை சுற்றுலாத் தலங்களாக அறிவிக்கச் செய்தார். நேற்றைய தினகரம், மதுர்ம் இன்றைய இந்து நாளிதழ்களில் சுற்றலாத் துறையின் சிறப்பு அறிவிப்பில், நபர் ஒருவருக்கு ரூ.150 பெற்றுக்கொண்டு, தமிழக சுற்றலாத்துறையே, இந்நவகிரஹக் கோவில்களை சுற்றிக்காட்ட ஏற்பாடு செதுள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், மக்கள் வரவு அதிகரிக்கும். உள்ளூர் மக்கள் பிரசாத, பூசைக்குரிய பொருட்கள் விற்று சுய தொழில் புரிய முனைவர்; அதனால் பணப் புழக்கம் மற்றும் கோவில்களின் நிலைமை சேரமையும் என நம்புவோம். சுற்றலாத்துறை காட்டிய வேகத்தையும், விவேகத்தையும், ஏனைய துறைகளான இந்து அறநிலையத்துறையும், தொல்பொருள் ஆராய்ச்சித் துறையும் காட்டினால், சிகப்பு நாடாக்கள் அவிழ்க்கப் பட்டு, கோவில்களில் பூசைகள் தினந்§தோறும் நடைபெறும்; இக்கோவில்களிலிருந்து காணாமல் போகும் கல்வெட்டுச்செய்திகள் உலகெங்கும் அறிய வரும். எல்லாரும் சேர்ந்து இப்பணையை செய்வார்களா?
நீங்களும் இந்த நவக்ரஹ தலங்களை பார்க்க ஆவலாக உள்ளீர்களா? பயணிக்கவும் :-
http://puggy.symonds.net/~madan/navagraha/tour.html
இந்த வலைத்தளத்தில் உள்ள சிகப்புப் புள்ளிகளை சுட்டினால், உங்களை அந்தந்த ஸ்தலங்களுக்கே கொண்டு போகும்!
இப்போதைக்கு எந்த பதிவையும் படிக்க இயலாதவர்கள் மூக்கைச் சுற்றி pkblogs மூலம் முயலலாம்!
Subscribe to:
Comments (Atom)
