05 November 2010

சரஸ்வதி ஸ்நானம் ஆச்சா!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். மின் தமிழ் அன்பர்கள் மிக்க தமிழ் மரபு அரக்கட்டளைக்காக, ஒரு மாமனிதனை நான் பேட்டி எடுக்கப்போயிருந்தேன்.
அதன் முழு வடிவம் இங்கே கேளுங்கள்


இரண்டே இரண்டு டேபிள் வெயிட் (table weight) அவற்றின் மேல் உள்ள புடைப்பு சிற்பமும், எழுத்துக்களும் ஒருவரது வாழ்க்கைப் பாதையை மாற்ற முடியுமா? முடியும் என்றே சொல்கிறது இந்த ஒரு நவீன பகீரதனின் வாழ்க்கை. ஆம், அன்று பகீரதன் கங்கையை பூமிக்குக் கொண்டு வந்தான்.

இந்த நவீன பகீரதனோ, பூமிக்குக் கீழே மறைந்து ஓடும் ஜீவ நதியாம் சரஸ்வதியை பூமிக்கு மேலே கொண்டுவந்துள்ளார்!

6 மாதங்களில் முடிக்க வேண்டிய ஒரு பணி 20 ஆண்டு காலம் நீடித்தால்?

நீடித்தால், நம்மை பணி நீக்கம் செய்து விடுவார்கள் :)

ஆனால்,அதே தன் வாழ்வின் குறிக்கோளாக, ஆரிய திராவிட பிரித்துப் பார்க்கும் மாயை, மொழி வேற்றுமை, உலக வாழ்வியலுக்கு முன்னோடியாக பாரதத்தில் பல இடங்களில் பூமிக்கு 300 அடி கீழே ஓடிக்கொண்டிருக்கும் நம் ஜீவ நதி சரஸ்வதி, ராம சேது, நதிகள் இணைப்புத் திட்டம் - இப்படி நம்மை ஆட்டிப்படைக்கும் பல விசாரணைகளை தம்மிடையே ஆய்வுக்கு உட்படுத்தி, நம் நாட்டின் தொன்மையையும், புனிதத்தியும் நிலை நாட்ட தன் வங்கிப் பணியையே துறந்து ஆய்ந்து, முடிவுகளை தனது புத்தகங்கள் மூலமும், தனது ஆராய்ச்சி நிறுவனம் மூலமாகவும் பரப்பி வரும் ஒரு நிறை குடம் முனைவர். கல்யாணராமன். இனி, இவரது கோப்புகளைக் கேட்டபின் நாம் சொல்லப்போகும் தீபாவளி விசாரிப்பு என்ன தெரியுமா?

பாருங்கள் இந்தப்படங்களை . முனைவர் கல்யாணராமனின் படைப்புகள் மற்றும் அவரது வாழ்க்கைப் பாதையை மாற்றியமைத்த அந்த இரண்டு மேஜை கனங்கள் (Table weight with Indus script and animals)

அவரது நீண்ட பேட்டியை சிறிது சிறிதாக பல பாகங்களாக தர உள்ளேன்.

இனி வரப்போகும் தீபாவளிகளில் நீங்கள் கேட்கப்போகும் குசல விசாரணை:

சரஸ்வதி ஸ்நானம் ஆச்சா?

சரிதானே!





No comments: