21 October 2005

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடங்கள்-1 கயிற்றுப் பாட்டு!

பாதாளம் தெரிந்திருந்தும் கீழ் குதித்து,
பட்டை உரிபட்டு, உடன்பிறந்தார் பிரிந்து
குத்தீட்டி குதறல் பட்டு, அடிபட்டு, பதப்பட்டு,
நாராகி, இழுபட்டு வெயில் வாங்கிக் கைகோர்த்து,
கயிறாகத் திரிபட்டு ஒருசேரத் துணை நின்றேன்
நீயோ...
படிக்காமல், கரையாமல்,பண்பென்ன தெரியாமல்
பிடிப்பின்றி வாழ்ந்திட்டுப் பிறர்மேலே பழிபோட்டு
குடித்திடவே உயிர்தன்னை- என்னை சுருக்காக்குகிறாய்!
உன் உயிர் போவது உன்னால்,
என் பெயர் கெடுவது எதனால்?
உனக்கு வேலையில்லை, என்னை விடு, எனக்குப் பல ஜோலி-
பழு கட்டவும், இழுக்கவும், முறுக்கவும், இணைக்கவும்,
சேர்க்கவும்தான் தெரியும்! அது என் தொட்டில் பழக்கம்.
நீ எனக்கு சொல்லித்தருவது, கெட்டப் பழக்கம்!

No comments: