26 October 2005

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம்- 4 - காகிதம்.

காற்றடிக்கும் வேகத்தில் உறுதியோடு நின்ற என்
சாறுடைய தாய்விடச் சக்கையாகிப் போகினேன்

சக்கரத்தின் சுழற்சியில் சக்கரையை இழந்த நான்
திக்குயேதும் தெரியுமுன் தட்டித் தப்பையாகினேன்!

ரசாயனங்கள் குளியலும் ரப்பர் ரோலர் துவையலும்
தாண்டித் தாண்டித் திக்கியே காகிதமாய் மாறினேன்.

கடைகளில் புனிதனாய், புத்தகமாய் புத்தனாய்
நடையினில் உரைநடை, கவிதையேற்றி தேறினேன்!

அதிகமான மைய் எனில் - அப்படியே குடித்திட்டு
அரிதுமான மெய் எனில் - என்மேலே 'வரி'த்திட்டு

உரைகள், வரிகள் யாவையும் உலகினிற்கு அளிக்கவே
உளதை வடித்து ஏழைகள் கடிதமாக்கி கலவவே

என்றும் வெள்ளை மனதுடன் எதுவும் ஏற்றிக்கொள்ளவே
நன்கு தீது பிரித்திடா நடுநிலைஞன் ஆகினேன்!

மின்னஞ்சல் கணினி போன்றவை கணத்தை சுருக்கி தந்தினும்
அஞ்சிகெஞ்சி போகும் நிலை எனக்கு என்றுமில்லையே!

பதிவுபத்திரம் குழந்தைப் புத்தகம் - கணினி எட்டா உலகிலும்
மதிக்கும் நிலையில் மதிக்கு நிதி வாரி வழங்க நேரினேன்.

கடலையுண்ட பின் - கசக்கி எறியும் முன்
விடலை முடியும் முன், விடல்-ஐ தொடங்கும் முன்

படலை! மனதில் பதிய வைக்க என் எழுத்தை வாசி!
படபடக்கும் காகிதமென் படர்வுகளை யாசி!

No comments: