14 March 2006

தமிழன்னை திருப்பள்ளியெழுச்சி!!

தேவர் குறளாட்டித் திருவாசகம் சூட்டி
மூவர் தமிழோதி நாலாயிரம் பாடி
தாவடங்களாக முச்சங்கத் தமிழணிந்து
காவிய மாமணியாங் கம்பமுடி கவிழ்த்துத்
தீவினை மாற்றுந் திருமந்திரஞ் சொல்லி
ஆவியுருக்கும் அருட்பாவால் அர்ச்சித்துக்
கூவித் திருப்புகழைக் கூத்தாடித் தெண்டனிட்டுத்
தேவாதி தேவனருட் சேர்ந்திடுவோம் எம்பாவாய்!
-கவியோகி சுத்தானந்த பாரதி

எப்படிப் பாக்கள் அணிகலன்கள் ஆகின்றன!! ஆவியுருக்குகின்றன! கூவிக்கூத்தாட வைக்கின்றன! என்னே கவியின் கற்பனை! இப்படி தமிழை சுவாசித்து, நினைந்து, நினைந்து கசிந்துருகி கவிபுனையும் தமிழன்பர் எத்தனை பேர்? நாமறியோம்?

No comments: