05 December 2006

'கருத்து' நடத்திய கருத்தரங்கம்! விவாதம் 2ம் பாகம்

கருத்து நடத்திய கருத்தரங்கம் - 1 பார்க்க http://maraboorjc.blogspot.com/2006/12/blog-post.html மரண தண்டனை தேவையா?

நான் இந்த இடுகையை எழுதும் சில நாட்களுக்கு முன், எஸ்.வி.ராஜதுரை என்பவர், குற்றங்களுக்காக வருந்தச் செய்வதே நீதி எனும் தலைப்பில் குற்றம் புரிந்தவர்களை திருந்தச் செய்வது குறித்து தினமணி நாளிதழில் எழுதியிருந்ந்ததைக் காண நேர்ந்தது. அதற்கு பதில் ஒன்றை அரூரிலிருந்து திரு.ஸ்ரீ.மதிவாணன், என்பவர் எழுதியுள்ளார். அதன் சாராம்சத்தை கீழே தருகிறேன். இக்கட்டுரைக்கு இந்த பதிலும் மிகப்பொருந்தும். ஆனால். அவர் ஒரு இடத்தில், "நூறு அப்பாவிகள் தண்டிக்கப் பட்டாலும், ஒரு குற்றவாளி கூட தண்டிக்கப்படக்கூடாது (!!!) என எழுதியுள்ளார். அதை பத்திரிகை ஆசிரியரும், திருத்தங்கள் செய்யாமலே வெளியிட்டுள்ளார்!"நூறு குற்றவாளிகள் விடுபட்டாலும் கூட, ஒரு நிரபராதி கூட தவறாக தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது", என்றுதானே இருக்க வேண்டும் அந்த வரிகள்?ஸ்ரீ.மதிவாணனுக்கு அந்த நீதியும் ஏற்புடையதாக இல்லை. அவர் கூறும் காரணம்?" ..உட்கார்ந்த இடத்திலிருந்தே விரும்பியதைச் செய்யும் வசதியை ஆயுட்சிறை பயங்கரவாதிகளுக்குத் தருமேயன்றி - அவர்களை வைத்துப் பாதுகாக்கையில், அன்னாரின் சிறைவழி ரெளடியிசங்களால் சிறைக்குள்ளேயே ஆபத்துகள் வளரவும், தீய திட்டங்கள் மேலும் வலுப்பெறவும் வழிசெய்யும்; ஆயிரம் கிரண்பேடிகள் உருவெடுத்தாலும் கொடூரக் கொலையாளிகள் திருந்த வாய்ப்பே இல்லை!"" ... பயங்கரவாதிகளால் கொல்லப்படும் ஆயிரமாயிரம் ராணுவ வீரர்களுக்கு இரங்கி, ஒரு சொட்டுக் கண்ணீர் விட எந்த அறிவு ஜீவியோ, மனித உரிமைவாதியோ முன் வருவது இல்லை!""...ஜெசிகா லால், ப்ரியதர்சனி மாட்டூ, போன்ற பெண்கள், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப் படுகையில், எத்தகைய அவமானமும், வேதனையும், கதறலையும் அனுபவித்திருப்பர்? அது அந்த தவறைச் செய்யும் ஆணுக்கு சாதாரணமாகத் தோன்றலாம். ஆனால், அந்த காலித் தனத்தை உடலிலும், உயிரிலும் தாங்கித் துடித்து, மானத்தையும் உயிரையும் ஒரு சேர, உச்சபட்ச வலியினூடே இழக்கும் பென்ணின் நிலையில் தன்னை கற்பனை செய்துகொண்டால், அங்கே, எத்தகைய மனிதாபிமானங்களுக்கும் இடமிருக்காது,".. என்று எழுதியுள்ளார்.இதைப் படித்து, போன ஞாயிற்றுக்கிழமை, கண்பார்வையற்றவர்களுக்காக பாடங்கள் படிக்கச்செல்கையில், தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர் இருவர், சிறுகதை தொகுப்பொன்றை படிக்கச் சொன்னார்கள்; அதில் மனித நேயத்தை மேலிட்டுக்காட்டும், ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் கதியினூடே, கோவி.மணிசேகரனின் "கழுவேறிமேடு" எனும் கதையைப் படிக்க நேர்ந்தது! சரித்திர ஆசிரியரின் கதை இங்கே எங்கே வந்தது? என எண்ணி வியந்தபடி கதையை படித்தேன். அந்தக் கதையிலும் மனிதம் நிலைத்தது! நீதியும் நிலைத்தது!அந்தக் கதையின் முடிவையே இந்தக் காலத்திலும் கடை பிடித்தால், கட்டாயம் காசுவாங்கி நீதி விற்கும் அவலம் இருக்காது!கதையின் சுருக்கத்தை இங்கே தருகிறேன்...இன்றைய விழுப்புரம் அருகேயுள்ள வில்லியனூர் கோவிலருகே இருக்கும் பாகூர். அங்கு, விஜய நகர பேரரசுக்கு உட்பட்ட மண்டலாதிபதிகளுள் மல்லமராஜு என்பவன் ஆள்கிறான். சாமானியன், காதலந் பெயர்- வில்வநேசன்; வில்லியனூர் சிவன் கோவிலின் சுவாமி பெயர்! (அம்மனின் பெயர்- குயிலம்மை!- இந்த அழகிய பெயர்களைக் கண்டதும், அந்தக் கோவில் இன்னும் இருக்கிறதா எனக் காண மனம் விழைகிறது!). காதலி சுந்தர மேனியாள்!கதையை ஊகித்திருப்பீர்களே! பலம் கொண்ட மல்லமராஜு, கோவிலில் சுந்தர மேனியாளைக் கண்டவுடன் மயக்கம் கொள்கிறான். அவளை அடைய எல்லாம்செய்து பார்க்கிறான். ஆனால் அவள் மசிவதாயில்லை! தான் அடைய முடியாத ஒரு பெண்ணை ஒரு சாமானியன் அடைவதா, எனவெண்ணி, ஒரு பொய் கொலையில் சுந்தர மேனியாளை சிக்க வைத்து அவளை கழுவிலேற்ற நாள் குறித்து பறை அறிவிக்கிறான்! ஊரே அதிர்கிறது!கழுவிலேற்றும் நாளில், எதிர்பாராத விதமாக, பேரரசன் கிருஷ்ண தேவராயர், தன் சைன்யத்தோடு பாகூர் வழியே செல்கிறார். அவர் வரும் நாளன்று, அபசகுனமாக கழுவிலேற்றலாகாது, என, அந்த தண்டனையை மல்லமராஜு, தள்ளிப் போடுகிறான்; அரசனை எதிர்கொண்டழைக்கிறான். எல்லா உபசரிப்புகளும் நடைபெற்றபின், உள்ளூர் கவிஞர் குப்புசாமி கவி பாட அழைக்கப் படுகிறார். அவரோ, மன்னனை பற்றி பாட மறுக்கிறார். சினம் கொண்ட மாமன்னன் காரணம் கேட்கிறான். அதற்குக் கவிஞர், மல்லமராஜுவின் கொடுமைகளை எங்கே சபையில் கூறினால், பின்னர் மன்னன் சென்ற பின் அவன் எல்லா மக்களையும் சித்ரவதை செய்வான் எனப் பயப்படுவதாக அறிவிக்கிரார்! மதிமந்திரி ராயர் அப்பாஜி, அதற்கு சம்மதம் அளித்து, மாலையில் கவிஞரும், மன்னரும் தனியே சந்திக்க ஏற்பாடு செய்கிறார். அச்சந்திப்பில், மல்லமராஜுவின் அக்கிரம காவியங்கள் அரங்கேறுகின்றன! சாட்சியாக அழுதபடி கை கட்டி எதிரே நிற்கும் விவநேசன், மற்றும் கைதியாய் சிறையில் வாடும் சுந்தர மேனியாள்!உண்மையறிந்த மன்னன், மறுநால், அந்த பெண்ணை விடுவித்து சபையில் வர ஏற்பாடு செய்கிறான். தைரியமாக தனை எதிர்நோக்கி நிற்கும் பெண்ணைப் பார்த்ததும் மன்னனுக்கு தலைநகரிலுள்ள தனது பெண்ணின் நினைவும், துணிவும் ஏனோ, மனதில் தோன்றிவிடுகின்றன! சுந்தரமேனியாளுக்கு தவறுக்குப் பரிகாரமாக என்ன வேண்டுமானாலும் தருவதாக வாக்களிக்கிறான். கொடுங்கோல் அழிய வேண்டுமென்றும், தனது காதல் கல்யாணமாக நிறைவேற வேண்டுமென்றும் கேட்கிறாள்; அதோடு நின்று விடாமல், மாமன்னன் நீதி என்றென்றும் மக்கள் நினைவில் வைத்துக் கொள்ளும் ஒரு வினோத தண்டனையை மல்லமராஜுவுக்கு பெற்றுத்தருகிறாள், சுந்தரமேனியாள்! என்ன தவறு? என்ன தண்டனை?தவறான தீர்ப்பு சொன்னதற்காக, அந்த தண்டனையை, தீர்ப்பு சொன்னவனே அனுபவிக்க வேண்டும்! அதாவது, மல்லமராஜு, கழுவிலேற்றப்பட வேண்டும்!!தண்டனை நிறைவேறுகிறது; காதலும் நிறைவேறுகிறது! புலவனும் மாமன்னனை போற்றி, பாடல்கள் பாடுவதாக முடிகிறது கதை! இது எப்படியிருக்கு!இது மாதிரியான தீர்ப்பு தந்தால், நிறைய ஆட்சியாளர்கள், நீதிபதிகள் இன்று சிறையில்தான் வாட வேண்டும், தூக்கு மேடையும் ஏற வேண்டும்! நடக்குமா? இல்லை இப்படி சட்டம் வந்தால், பொய் வழுக்கு போடும் காவலர்களும், வக்கீல்களும், வாய்தா வாங்கியே மக்களை ஏமாற்றும் வக்கீல்களும், காசுக்கு நீதியை விலை பேசும் நீதிபதிகளும் காணாமல் போவார்கள்! ஹ¥ம்ம்ம்ம். பெருமூச்சு விட்டு என்ன பலன்?

3 comments:

Deepa said...

Intresting article.
Human psyche works on the principle of Reward (??) and response.This is exibited roghjt from childhood.So i would say that this goes the same towards Punishment and response too.
Just as the proveb says "Once bitten twice Shy".. once the punishment is executed for a certain crimes,.. then perhaps similar like minded (huh..huh.. like minded in crime) people may not unhesitantly jump to get the thrill of crime...
For Heinous crimes against womens..i strongly vote of capital punishment.

Maraboor J Chandrasekaran said...

வாங்க தீபா, உங்க கருத்தை நான் ஏற்கிறேன்

Maraboor J Chandrasekaran said...

17ஆம் தேதி செய்தி : ஆர்.பி.தியாகி எனும் காவல் மேலதிகாரி, 1987, கைதியை சித்திரவதை செய்து கொன்றது நிரூபணம் ஆனதால், அவருக்கு மரண தண்டனை அளிக்க தில்லி உயர்நீதி மன்றம் ஆணையிட்டது. சட்டம் இன்னும் உறங்காமலிருக்கிறது என்பதற்கு உதாரணம், போன வாரத்தின் இந்த தீர்ப்பு! நான் முன்னே குறிப்பிட்ட கோவி. மணிசேகரனின் கதை ஞாபகம் வருகிறது அல்லவா?