29 October 2005

மரம் வளர்க்கும் அரம் !

தூர் வடித்து நீருயர்த்தி வான் நிமிர்ந்தேன்
சார் புலர்பறவைபல தான் வளர்த்தேன்
சீறழிப் புவி யினில் காலம் தாண்டி
பலபலப் பதிவினிற்கு சாட்சியானேன்!

மாசு தூசு நீக்கி உந்தன் மூச்சு தந்தேன்
வீசு புயல் செயலிழக்க அரண் வளர்த்தேன்
கோர மானசுடு வெயில் தளர்ந்து போயி
ஆரமரக்குளிர் நிழல் படரத் தந்தேன்

வேர்பதித்து உட்புகுந்து பூமி கண்டேன்
பார்நிலைக்க மண்பிடித்து இருக்கம் தந்தேன்
ஆழிசூழ் கடல்புகா அணைப்பும் ஆனேன்
ஆவிபோயும் அறுத்தெடுக்கும் பலகை தந்தேன்

ஊடல் கொண்ட படர்கொடி, பழமுண்ண
கூடும் பறவைகள்; தேடும் வேடர் பிறழவே
நாடும் மிருக மறை விடம்; பற்றறுத்த
மாமுனி, அத்தனைக்கும் அத்துணை!

ஆதரவு நாடிநான் வாய்திறக்க இயலுமாவுன்
ஆணிவேர ருக்கும் ஆசை போக்கிட முடியுமா?
மாடிகோடி கட்டினாய் மண்ணையும் சுறுக்கினாய்
நாடி வாழ்ந்த தாய்எனது நாடி,நாபி கருக்கினாய்.

கீழிறங்கி பதியவும் மண்ணைக் காணோம்
மேல்நிமிர்ந்து பார்க்கவும் ஒளியைக்காணோம்
கூடிநிற்க தேடினேன் துணையைக்காணோம்
நீண்ட உன்வீடு எனக்குஇ டுகாடு ஆகி!

காய்ந்த பூமி காக்கக் கரம் நீட்டி வாழ்ந்த
வேய்ந்த கூரையாய் அமைந்த கோலம் எங்கே?
சாய்ந்த என்னை எவரெவர், கூறு போட்டும்
மாய்ந்த பின்னும் தருகிறேன் -மானு டர்க்கே!!

1 comment:

Anonymous said...
This comment has been removed by a blog administrator.