06 November 2005

என்ன சாதி(தீ??)

மரபு மீறா புதியவன் எனவே பத்தினி நான்,
வரவு தெரியா வரிகள் செலவிட பட்டினி நான்!

கவலை கவலை கொள்ளத் தொடங்கியது- என்
திவலைச் சிந்தனைகள் சிதறா,க விதை விளைய!

மற்றவர் தொலைநின்று விநோதமெ ன்றனர்,
கற்றவர் கலையாத கலையாக கண்டனர்..

உயிர் வந்ததும் உயிர்மெய் தேடினேன்
பயிர்ந் துசிலிர்த்தெழ படரடி தேடினேன்

வந்தது வேறொரு ஆயுத (எ?)அழுத்து!
வெந்தது கவியெழ துடித்த கருத்து.

சாதியென் னவுன் சார்பு என்ன?
ஓதிவந் தன சில சாத்தான்கள்..

வலைபதியும் புனிதங்களில்- சிலந்தி
வலை பதிக்கும் சில பூச்சிகள்

சொல்லத் துணிந்தேன், அவர்
சொல்லால் தணிவாரென!

நூல் யாசகம் செய்வதில் அந்தணன்
சூள் உலகமெ னதெண்ணும் மன்னன்!

வார்த்தைச் சிக்கனச் செட்டி
வார்ப்பை ருசிக்கத் தரும் சட்டி!

தமிழைப் புசிப்பதில் முதலி
தலை தாழ வளர வரும் கதலி!

மனதுக்குப் பிடித்தது மதம்! - ஆம்
எவரும் சம்'மதம்', எதுவும் சம்'மதம்'

சாதிகேட்டா சொற்கள் வளரும்?
நாதிகேட்டா புற்கள் வளரும்?

திருத்தி வளர்த்தால் பூத்தரும்!
தடுத்து மறுத்தால் வெடித்திடும்

பூவா பூகம்பமா?
நீயே முடிவு செய்!

No comments: