விநாயகர் சதுர்த்தி முடிந்து போன ஞாயிற்றுக்கிழமை பிள்ளையாரை கிணற்றிலோ,குளத்திலோ, கடலிலோ போடவேண்டும். நான் வேறு ஒரு பழைய கோவிலுக்குப் போய் தகவல்கள் சேகரிக்கக் கிளம்பிக் கொண்டிருந்தேன். அதிசயமாய் வீட்டில் எல்லாரும், எதோ, கோவளமாமே? கேரளத்துக் கோவளம் மாதிரி இல்லையென்றாலும், காலியாய் இருக்குமாமே? அங்கே போய் மண் பிள்ளையாரைக் கடலில் கரைத்துவிட்டு வருவோமா? என்று கேட்டார்கள்! எனக்கு அதிசயமாய் போகிவிட்டது! என்ன இது அந்த கைலாசநாதர் மீண்டும் அழைக்கிறார் என்று! அங்கே எனக்கு பரிச்சயமானவர் நாராயணன்.
சரி, விஷயத்துக்கு வருகிறேன். அம்மா, அண்ணன் மற்றும் என் குடும்ப சகிதமாய் அங்கே வருகிறேன் என்றதும் சந்தோஷமாய் வரச்சொன்ன நாராயணன், எங்களை கடலுக்கருகில் கூட்டிக் கொண்டு பொய் விநாயகர் சிலைகளை கடலில் போட உதவினார். என் நண்பர் ராஜன் கணேஷ் கோவில் செலவுக்காக பலரிடம் சேர்த்த பணத்தை அவரிடம் குடுத்தேன். மனமகிழ்ந்த அவர், கட்டாயம் வார பிரார்த்தனையை ஆரம்பிப்பதாக உறுதியளித்தார்.
கடல் அன்று கொஞ்சம் ஆக்ரோஷமாய் இருந்தது. அதனால், அருகில் தேங்கிய நீரில், படகை விட்டு, எங்கள் அண்ணன் மகனின் படகு சவாரி ஆசையையும் தீர்த்து வைத்தார்.சரி, பிள்ளையார்படத்தைப் பாருங்கள்! அதை செய்தது அடியேந்தான். கடலில் சேர்க்கையில் மனதுக்கு மிகவும் பாரமாக இருந்தது, எதோ நம் பிள்ளையை நாம்
வெளியூருக்கு அனுப்புவது போல்!பிள்ளையார் சதுர்த்திக்கு முதல் நாள் குழந்தைகளை அழைத்து ஒரு நண்பர் வீட்டில், நிறைய களிமண் கொடுத்து அவரவரிஷ்டம் போல் பிள்ளையார் பிடிக்கச் சொன்னார்கள்! தெரியாத் தனமாய் நிறைய்ய்ய்ய்ய மண் வாங்கிவிட்டார்கள்! என் அண்ணனும், இதுக்கு எதுக்கு கவலைப் படறீங்க? கொஞ்சம் என் கையில் குடுங்க, என் தம்பி நல்லாவே சிலை செய்வான் என்று சொல்லி, ஒரு
அரை சாக்கு மண்ணோடு வீடு வந்து சேர்ந்தார்! முதலில், திண்டில் சாய்ந்தபடி, புது போஸாக இருக்கட்டுமே என்று குட்டியாய் ஒன்று செய்து முடித்தேன். 11 மணிக்கு பார்த்த என் அம்மா, "அட, என்னடா இது? நிறைய மாலைகள் வாங்கி வெச்சுருக்கேன். நல்லா பெரிய பிள்ளையாராப் பண்ணுடா!," என்று 'அன்பு'க் கட்டளை இடவே, ஆரம்பித்தது இரண்டாம் பிள்ளையார் சிலை செய்தல்! நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே முடிந்தது! நல்லா இருந்தால், "கணபதி பப்பா, மோரியா, கணபதி பப்பா,
லவ்கரியா", என்று ஜோராக ஒரு முறை சொல்லி கூவி அழையுங்கள்! மராட்டியர்கள் அப்படித்தான் கடலில் போடும்போது கூவுவார்கள் (கணபதியே, திரும்பிவா, சீக்கிரமாய் வா, என்று அர்த்தம்). என்ன கூவிட்டீங்களா? எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பிள்ளையாரை எடுத்துக் கொண்டு கிளம்புகையில் அவரை தலையில் வைத்துக் கொண்டு, கணபதி பப்பா...கூவினார்கள். என் பெண் தன் சைசுக்குத்
தகுந்த மாதிரி, பிள்ளையாரின் வாகனமான 'எலி' யாரை தலையில் எடுத்து வைத்துக்
கொண்டாள்! சும்மா அதிருதுல்ல?
10 comments:
கணபதி திரும்பி வந்துவிடுவார்!!
பின்ன இந்தப் பிஞ்சுகள் வாய் நிறைய அழைக்கிறார்களே.என்ன அழகு.
அருமை அருமை!!
அருமையான முயற்சி. நண்பர் நாராயணனுக்குப் பாராட்டுக்கள்.
வல்லி சிம்ஹன், மற்றொரு பதிவின் பதிலில் சொன்னதுபோல், தொல்லைக்காட்சிப் பெட்டியை கிடாசியாச்சு. அதான் வீட்ல குழந்தைளும் மண்ணெடுத்து அவங்கவங்க பிள்ளையார் செஞ்சு விளையாண்டாங்க. தனியா கவனிச்சு, பூ போட்டு, படையல் வெச்சு, பூஜை பண்ணினாங்க. நாம் எப்படியோ, மக்கள் அவ்வழி. நாம 'விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு", மும்தாஜ் ஆடற படத்தை பார்த்துகிட்டு ஒக்கார்ந்தோம்னா, அவங்களும் அதைத்தான் பின்பற்றுவாங்க. கட்டாயம் பிள்ளையார் அடுத்த வருஷம் வருவார்., குழந்தைகள் குரலைக் கேட்டு! உங்க வருகைக்கு நன்றி.
நன்றி கீதா சாம்பசிவம், எப்ப இந்தியா வர்றீங்க? முன்னயே தேதி சொன்னா, உங்க ஊர் கோவிலுக்கு போக வசதியாயிருக்கும்!
Pillayar Gambirama irukkar! Neengale panninadala karaikka manasu varadu kashtamthan.
Kailasanathar main roadlaye irukara? or off the Mahabalipuram road?
Vanakkam Shoba Madam,
Kovalamis off- Mahabalipuram Road on the left hand side when you drive from Chennai to Mahabalipuram, as soon as you cross Muttukadu back water bridge and Taj FishermanCove 5 star hotel.
Chandra
அருமையான பிள்ளையாரா வந்திருக்காரே ... பிள்ளைங்களோட ஊர்வலமும் சூப்பர்.. ...அந்த மீனவ நண்பருக்கு பாராட்டுக்கள்.
நன்றி, முத்துலட்சுமி. இப்படி பல கோவில்களை நாங்கள் சீர் செய்ய முற்படுகிறோம். அவ்விடத்திலேயே, கல்வி, மருத்துவம் இலவசமாக நடத்தவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
//நல்லபடியாக பிள்ளையார் பிடித்தது, பிள்ளையாராகவே முடிந்தது! //
கண்ணிலே விளக்கெண்ணை ஊத்திட்டு வந்ததில் இது கண்ணிலே பட்டது. எந்த வழிபாடும் விநாயகரில் ஆரம்பித்து, அனுமனில் முடிய வேண்டும் என்பதே பின்னாட்களில் "பிள்ளையார் பிடிக்கக் குரங்காய் மாறியது" எனத் திரிந்து விட்டது. பிள்ளையார் பற்றிய என் பதிவுகளைப் பார்க்கவும். :))))))))
நன்றி கீதா சாம்பசிவம். கட்டாயம் உங்கள் பதிவுகளைப் படிக்கிறேன்.
Post a Comment