வல்லமை தாராயோ இந்த நானிலம் பயனுற வாழ்வதற்கே? சொல்லடி சிவசக்தி!
08 February 2006
கல்லிலே கலை வண்ணம்!-4
Action Still of a stunt scene!! புள்ளமங்கை கோயிலில் இதுவும் ஒரு கல்லோவியம்!
போர் காட்சி! குதிரையில் ஏறிய வீரன், பின்னால் துரத்திவருகிற யானையை அடக்கும் காட்சி. யானையின் கோபமும், அங்குசத்தால் தாக்கியபடியும், குதிரையையும் ஓட்டிக்கொண்டே போகும் வீரனை ஒரு சேரக் காட்டும் இக்கல்லோவியம்,காலத்தால் சிறிது சிதைந்திருந்தாலும், கோலத்தால் நம் மனதை வெல்கிறது அன்றோ?
மிக அருகே, தூண்களின் இரு புறமும் கீழ் நிலையில் பல யாழி முகங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஆர்வமின்றி பார்க்கும் கண்களூக்கு, அந்த யாழியின் வாய்க்குள் ஒரு உருவம் இருப்பது புலப்படாது! சற்றே நெருங்கி உற்றுப் பாருங்கள்! ஆ! யாழி வாயை கிழித்துக் கொண்டு ஆயுதம் ஏந்திய ஒரு வீரன் வெளியே வருகிறான்!! எனக்கென்னவோ அது காளிங்கனை சம்ஹாரம் செய்யும் கண்ணனாகவே தோன்றியது! இந்த அற்புத படைப்பின் மொத்த அளவும், நம் கைக்குள் அடங்கிவிடும்!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
mini marvel
thanks Ramesh :)
Post a Comment