09 July 2006

தேன்கூடு-போட்டி: மரணம்- குட்டிக் கவிதைகள்!

கொலை
ஒரு மரணத்தால் வந்தது
நான்கு மரணதண்டனை!
வெட்டுப்பட்டது
நான்குபச்சை மட்டைகள்!

அடக்கம்
அடக்கம், அமரருள் உய்க்கும்!- அந்த
அமரரும், அமரராய் அடக்கம்!
அடக்கம் செய்யப்பட்டார்,
அமைதியாய் அமரரானார்!

காலமானார்
அக்காலம், இக்காலம் எதிர்காலம்
எக்காலமாயினும்,என்றும் மாறா
'இறந்த' காலம்; ஒருவர்
போனதும் சொன்னார்- அவர்
"காலம்" ஆனார்!!

4 comments:

dondu(#11168674346665545885) said...

ஒன்றின் பால்-பலவின் பால் பிழை:

ஒரு மரணத்தால் வந்தது
நான்கு மரணதண்டனை!
வெட்டுப்பட்டது
நான்குபச்சை மட்டைகள்!

ஒரு மரணத்தால் வந்தன
நான்கு மரணதண்டனைகள்!
வெட்டுப்பட்டன
நான்குபச்சை மட்டைகள்!

இது எப்படி இருக்கு?

அன்புடன்,
டோண்டு ராகவன்

Maraboor J Chandrasekaran said...

டோண்டு ராகவன்!பின்னூட்டத்துக்கு நன்றி வாத்தியாரே!!

Anonymous said...

In spite of gramatical slip it sounds well.Puria neram vendum.

Maraboor J Chandrasekaran said...

Nandri Chellu. NEram eduthukkondu purinjikittadhukku nandri :)