03 April 2006

அக்றிணைப் பொருட்கள் கூறும் பாடம் - 2 -விளக்கு!


பஞ்சலோகம் அஞ்சு விரல் ஒன்று சேர்ந்து
சுட்டெரியும் எறிதணலில் கலவையாகி
கொட்டிவைத்த சுட்டுவைத்த மண்ணுக்குள்ளே
ஆவிபிரிந்தோடும் உடல் பிண்டமாகி
பட்டறையில் தட்டி தட்டிப் பொன்னுமாகி
மின்னுகிற விளக்கெனவே பிறவி பெற்றேன்
அழகாக அம்மணியர் வாங்கிப்போக
பூஜையறை மேடையிலே பதவி ஏற்றேன்
விட்டதடா பட்டபாடு - மூச்சுவிடுமுன்
பட்டுதிரி பொட்டுவைத்து எண்ணெய் குளித்தே
சுட்டெரியும் சுடர் கொண்டு தீபமேற்றி
படர்வெளிச்சம் பாரெங்கும் வீசக் கற்றேன்!
நித்தம் நித்தம் எண்ணெய்குடித்தாவி நீக்கி
நெருப்பு உண்டு நிர்மலனாய் இருளைப்போக்கி
வந்து வீழும் விட்டில்கள் விரகம் போக்கி
வெந்து கரம் வேகிடினும் வேள்வியாக்கி
விடியல் நம்பி நம்பிக்கையாம் ஜோதியேற்றி
சொல்லும் பாடம் அறியலையோ சின்னத்தம்பி!
இல்லாத ஒன்றையெண்ணிக் கனவில்வாழும்
இயலாமை மண்ணிறுக்கம் களைந்து நீயும்
ஐம்பொன்னாம் ஐம்புலன்கள் ஒன்று சேர்த்து
நம்பிக்கைக் கண்ணொளிற வெளிச்சம் காட்டி
விளக்கு எந்தன் வழிபழகப் பந்தம் காட்டி
வருமுலகு அறிந்திடும்நல் பாதை விளக்கு!

ப்ளாகர் வரிசையில் காணப்பட்டாலும், "முன்னெழுதியவை" யில் காணவில்லை. எனவே, மீண்டும் பதிகிறேன்.

1 comment:

பட்டணத்து ராசா said...

சுற்றும் போது ஆட்டம் இல்லா சுழற்சி
நிற்கும் போது சுழலின் இர்ப்புக்கு மெல்ல ஆட பின்பு தடதடத்து விழும்.